பேரறிவாளன் உட்பட 7 பேரும் குற்றவாளிகள்தான்.. நிரபராதிகள் மாதிரி ஸ்டாலின் கொண்டாடுகிறார்: அண்ணாமலை
சென்னை: ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை நாம் மறுக்க முடியாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் தன்னை விடுதலை செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினார்.
இந்த வழக்கு 6.5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் பேரறிவாளனை 142 சட்டவிதிபடி விடுதலை செய்வதாக உச்சநீதமன்றம் தீர்ப்பளித்தது.

பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
இந்த தீர்ப்பை தமிழகத்தில் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்த நிலையில் நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை பேரறிவாளன், அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். அப்போது பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் ஆரத்தழுவினார். அது போல் பேரறிவாளன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியையும் சந்தித்தார்.

பாஜக வரவேற்கிறது
இந்த நிலையில் இந்த தீர்ப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகையில், ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்கள் குற்றவாளிகள் என்பதை மறுக்க முடியாது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நிரபராதி என எங்கும் கூறவில்லை. நிரபராதிகளை விடுதலை செய்தது போல் முதல்வர் ஸ்டாலின் கொண்டாடி வருகிறார்.

நுணுக்கமான தீர்ப்பு
உச்சநீதிமன்றம் மிக மிக நுணுக்கமான தீர்ப்பை வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பாஜக ஏற்கிறது. சரித்திரத்தை மறக்கக் கூடாது, நம் மண்ணில் நடந்ததையும் நாம் மறக்க கூடாது. அமைச்சரவை எடுத்த முடிவை அப்படியே ஆளுநர் ஏற்க வேண்டும் என அவசியமில்லை.

இரட்டை வேடம்
திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகியிருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுகிறது என அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார். பேரறிவாளன் விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி இன்றைய தினம் அறவழி போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
-
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications