பாஜக வர்த்தகர் அணி நிர்வாகி.. விற்றது கஞ்சா.. 4 கிலோ பொட்டலத்தோடு குணசேகரனை தூக்கிய போலீஸ்!
சென்னை: வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே போதைப் பொருள் பழக்கம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வரும் நிலையில் இது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக தொடர் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் சென்னையில் அதிரடி கஞ்சா வேட்டை நடத்தப்பட்டது.
சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (40). இவர் பாஜக வடசென்னை மேற்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில், பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் நடந்த சோதனையில் 4 கிலோ கஞ்சா மற்றும் எடை போடும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டபோது விஜய், ரகு ஆகிய இருவர் கஞ்சாவுடன் பிடிபட்டனர். அவர்களுக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது என போலீசார் விசாரித்ததில் அவர்கள் குணசேகரன் பெயரைக் கூறி உள்ளனர்.
இதையடுத்து, பாஜக நிர்வாகி குணசேகரன் வீட்டில் ரெய்டு நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், குணசேகரன் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டிலேயே கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்த பாஜக மாவட்ட நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications