Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனாவை உருவாக்கிய சீனா-அம்பலமானது குட்டு..கம்யூனிஸ்டுகள் இந்தியாவின் சாபக்கேடு..பாஜக கடும் அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனாவை உருவாக்கியதே சீனா என்ற குட்டு அம்பலமாகிவிட்டது; ஆனால் சீனாவை விமர்சித்தால் இந்திய கம்யூனிஸ்டுகள் பொங்கி எழுகின்றன என பாஜக கடுமையாக சாடியுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஆண்ட்ரு ஹஃ ப் - சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரிசோதனை கூடத்தில் பணியாற்றிய அமெரிக்க நிறுவனத்தை சேர்ந்த இந்த விஞ்ஞானி கொரோனா தொற்று சீனாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பயங்கரம் என்பதை தெளிவாக்கியுள்ளார். சீன அரசும், பரிசோதனை கூடத்தின் அதிகாரிகளும் இதை மறுத்து வந்தது. இந்த நிலையில் அங்கு பணியாற்றிய ஆண்ட்ரு ஹஃ ப் உண்மையை வெட்ட வெளிச்சமாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 வூஹானில் உருவான கொரோனா வைரஸ்

வூஹானில் உருவான கொரோனா வைரஸ்

வூஹான் குறித்த உண்மைகள்' என்ற அவரின் சமீபத்திய புத்தகத்தில், கொரோனா தொற்று குறித்த ஆராய்ச்சிக்கு சீனாவுக்கு அமெரிக்க அரசும் நிதி அளித்தது என்று குறிப்பிட்டுள்ளார். போதிய கட்டுப்பாடுகள், பாதுகாப்பு குறைபாடுகள், உறுதி செய்யாத உயிரி பாதுகாப்பு, உரிய தொழில்நுட்ப பாதுகாப்பு அணுகுமுறைகள் போன்றவை கடைபிடிக்கப்படாததாலேயே, வூஹான் பரிசோதனை கூடத்திலிருந்து நோய் தொற்று கசிந்து உலகம் முழுவதும் பரவி பல லட்சக்கணக்கான உயிரிழப்புகளை ஏற்படுத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

வெளவால்களும் கொரோனாவும்

வெளவால்களும் கொரோனாவும்

வௌவால்களில் உள்ள பல்வேறு நோய்க்கிருமிகள் குறித்து பல ஆண்டுகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆண்ட்ரு ஹஃ ப், எகோ ஹெல்த் அல்லையன்ஸ் என்ற அமெரிக்க நிறுவனத்தின் துணை தலைவராக பணியாற்றி கொண்டிருந்தார். அமெரிக்காவின் தேசிய சுகாதார மையத்தின் நிதியுதவியோடு தான் சீனாவின் வூஹான் பரிசோதனை கூடத்தில் ஆராய்ச்சி நடத்தப்பட்டதாக இவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, சீனா மீது புகார்

அமெரிக்கா, சீனா மீது புகார்

மேலும், முதல் நாளிலிருந்தே தங்கள் நாட்டிலிருந்து தான் கொரோனா நோய் தொற்று மரபணு முறையில் பரவியது என்பது சீனாவுக்கு தெரியும் என்றும் உரிய பாதுகாப்பு வழிமுறைகள், சாதனங்கள் இல்லாதது தெரிந்தும், ஆபத்தான இந்த உயிரி தொழில்நுட்பத்தை சீனாவுக்கு வழங்கிய அமெரிக்காவையும் குற்றம் சாட்டியுள்ளார். வூஹான் நோய் நுண்ணுயிரியல் ஆராய்ச்சி நிறுவனம் சீன அரசினுடையது என்பது உலகறிந்தது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை வெளிப்படுத்தி, உலக அளவில் சீனாவின் பெருமையை உயர்த்த எண்ணிய சீன கம்யூனிஸ்ட் அரசின் அழுத்தம் தான் கொரோனா நோய் தொற்று பரவுவதற்கும், பல லட்சம் உயிர்கள் இழப்பதற்கும் காரணமாய் அமைந்தது என்று பல்வேறு சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

கம்யூனிஸ்டுகள் சாபக்கேடு

கம்யூனிஸ்டுகள் சாபக்கேடு

உண்மை இப்படியிருக்க,இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் @cpimspeak உலகையே புரட்டி போட்ட இந்த நோய் தொற்றிற்கு காரணமாய் அமைந்ததாக சொல்லப்படுகிற சீனாவை விமர்சித்தால் பொங்கி எழுகின்றன என்பதோடு, சீனா 200 கோடி தடுப்பூசியை செலுத்தியதாக அறிவித்த போது கொண்டாடி போற்றி மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அதே நேரத்தில், இந்திய அரசின் தடுப்பூசியை கடுமையாக விமர்சித்ததோடு,இந்தியா 200 கோடி தடுப்பூசிகளை தயாரித்ததாக குறிப்பிட்ட போது வாய் மூடி மௌனமாக இருந்தது அவர்களின் சீன தேசப்பற்றை பறை சாற்றியது. இந்தியாவின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தியது. கம்யூனிஸ்டுகள் @tncpim சாபக்கேடு என்றால் அது மிகையாகுமா?. இவ்வாறு பாஜகவின் நாராயணன் திருப்பதி பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+