சென்னை, நாமக்கல், கோவை.. இனி மின்னல் வேகத்தில் செல்லலாம்.. திறக்கப்பட்ட சாலைகள்.. ரொம்ப முக்கியம்
சென்னை: நெடுஞ்சாலைத் துறை சார்பில் ரூ. 434.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாலங்கள் மற்றும் சாலைகள் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது .
கொல்லிமலைக்கு சென்னை, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூர் நகரங்களில் இருந்து வரும் வாகனங்கள்
எளிதாக செல்ல நாமக்கல் மாவட்டத்தில் முடியும். உள்ள 21-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாய விளைப்பொருட்களை எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.

மேலும், திருவொற்றியூர் - பொன்னேரி - பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை அகலப்படுத்தும் பணி சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், 58 கோடியே 64 இலட்சம் ரூபாய் செலவில் சென்னை மாவட்டம், திருவொற்றியூர் - பொன்னேரி பஞ்செட்டி சாலையில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே - கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம் மற்றும் சாலையை இரண்டு வழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக அகலப்படுத்தப்பட்ட சாலை ஆகியவற்றை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
திருவொற்றியூர்-பொன்னேரி-பஞ்செட்டி சாலையில் ஏற்கனவே வலுவிழந்த நிலையில் இருந்த 5.50 மீட்டர் அகலம் கொண்ட குறுகிய பாலம், தற்போது அகலப்படுத்தப்பட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றிலும் சி.பி.சி.எல் (CPCL), ஐ.ஓ.சி.எல் (IOCL), எம்.எஃப்.எல் (MFL) போன்ற தொழிற்சாலைகள் இயக்குவதால் இச்சாலையில் கனரக வாகனங்கள் பெருமளவில் இயக்கப்படுகின்றன. இப்புதிய பாலத்தால் இப்பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும், திருவொற்றியூரிலிருந்து மணலி, மாதவரம், மீஞ்சூர் மற்றும் கோயம்பேடு செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். மணலியிலிருந்து தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, இராயபுரம் மற்றும் சென்னை செல்லும் வாகனங்களும் எளிதாக செல்ல முடியும்.
பல்லடம் - தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக மாற்றியமைக்கும் பணி
திருப்பூர் மாவட்டம், பல்லடம் - தாராபுரம் சாலை இருவழித்தடத்திலிருந்து நான்கு வழித்தடமாக 53
கோடியே 40 இலட்சம் ரூபாய் செலவில் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்ட சாலையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இத்திட்டத்தில் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு சாலை நான்கு வழித்தடமாக அகலப்படுத்தி மேம்படுத்தும் பணியுடன், குறுக்கு வடிகால் கட்டுதல், பேருந்து நிறுத்தம் அமைத்தல், மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் சாலை மையத்திட்டு அமைத்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்கள், கோழிப் பண்ணைகள், தேனீ வளர்ப்பு மற்றும் உற்பத்தித் தொழில்கள் ஆகியவை அருகாமையில் அமைந்துள்ள இச்சாலையானது, திருப்பூர் மாவட்டத்தில் போக்குவரத்து செறிவு அதிகம் உள்ள சாலைகளில் ஒன்றாகும். பல்லடம் - தாராபுரம் சாலையில் அமைந்துள்ள நகரப்பகுதி மற்றும் சிற்றூர்களில் வசிக்கும் மக்களின் உயிர்நாடியாக இச்சாலை விளங்குவதால், இதன் அருகிலுள்ள கிராமங்களில் உள்ள மக்கள் காய்கறிகள் மற்றும் பணப்பயிர்களை பயிரிட்டு, பருவகாலங்களில் அருகிலுள்ள சந்தைப்படுத்தும் இடங்களுக்கு இச்சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்த சாலையானது கோவை, ஊட்டி, கொடைக்கானல் போன்ற பல்வேறு சுற்றுலா தலங்களுக்கும், பழனி போன்ற புனிதத் தலங்களுக்கும் செல்லும் சுற்றுலாப் பயணிகளின் இணைப்பை மேலும் மேம்படுத்துகிறது.
கோயம்புத்தூர் நகரில், கவுண்டம்பாளையத்தில் மேம்பாலம் அமைக்கும் பணி
கோயம்புத்தூர் நகரில், தேசிய நெடுஞ்சாலை எண்.57ல் (நாகப்பட்டினம் - கூடலூர் - மைசூர் சாலை) கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் கணபதி மணியகாரம்பாளையம் சாலை சந்திப்பில் 658 மீட்டர் நீளத்திற்கு 41 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இப்பாலத்தினால் ஜி.என் மில்ஸ் சந்திப்பு மற்றும் 4 இதர சந்திப்புகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் குறையும். மேலும், துடியலூரிலிருந்து சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மணிக்கூண்டு, அரசு மருத்துவமனை, காந்திபுரம், உக்கடம், பொள்ளாச்சி மற்றும் பழனி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும். ஜி.என் மில்ஸ் பாலத்தின் தள அளவில் காசிநஞ்சகவுண்டன்புதூர், கணபதி, உருமாண்டம்பாளையம், சின்ன வேடம்பட்டி, மணியக்காரன்பாளையம் மற்றும் சரவணம்பட்டி செல்லும் வாகனங்கள் எளிதாக செல்ல முடியும்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் .எ.வ.வேலு, மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் . என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் . சிவ் தாஸ் மீனா ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications