ஓபிஎஸ் - இபிஎஸ் மீண்டும் சேர வாய்ப்புள்ளதா? நீதிபதிகள் கேள்வி.. 2 பேரும் கூட்டாக சொன்ன பரபர பதில்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் ஓபிஎஸ் - எடப்பாடி 2 பேரும் மீண்டும் சேர வாய்ப்புள்ளதா என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா இன்று கேள்வி எழுப்பினார்.

Recommended Video

    ADMK பொதுக்குழு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

    அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு உள்ளது. ஜூலை 13ம் தேதி ஓபிஎஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரிகை விடுக்கப்பட்டது.

    இந்த பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

    விசாரணை

    விசாரணை

    இன்று இந்த வழக்கில் நடந்த விசாரணையில்,

    ஓபிஎஸ் வாதம்: சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு வழக்கில் எங்கள் கையை கட்டிபோட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் பொதுககுழுவை அனுமதித்துவிட்டது என்று கூறி, எங்கள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டனர்.

    தலைமை நீதிபதி ரமணா: நீங்கள் எத்தனை வழக்குகளை பதிவு செய்துள்ளீர்கள். எத்தனை அதிமுக வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தலைமை நீதிபதி ரமணா: ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் நடந்தது என்ன?

     நீதிபதி கேள்வி

    நீதிபதி கேள்வி

    ஓபிஎஸ் தரப்பு வாதம்: எல்லை மீறி பொதுக்குழுவை கூட்டி அதில் எல்லை மீறி முடிவை எடுத்து உள்ளனர். கட்சியின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது.

    தலைமை நீதிபதி: நீங்கள் இரண்டு பேரும் மீண்டும் இணைய வாய்ப்பு உள்ளதா?

    ஓபிஎஸ் - இபிஎஸ் தரப்பு கூட்டாக பதில்: இல்லை, வாய்ப்பு இல்லை.

     சேர வாய்ப்பு இல்லை

    சேர வாய்ப்பு இல்லை

    எடப்பாடி தரப்பு: பொதுக்குழு உயர் நீதிமன்ற அனுமதியோடு சட்டப்படிதான் நடந்துள்ளது.
    ·
    ஓபிஎஸ் தரப்பு: இந்த பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியிலேயே விதி மீறல்கள் உள்ளன, உச்ச நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மதிக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து விதியை மீறி நீக்கி உள்ளனர்.

    உத்தரவு

    உத்தரவு

    நீதிபதி: இதை உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். சில விஷயங்களை மாற்ற முடியாது. உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது. அதிகபட்சம் 3 வாரத்திற்குள் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதுவரை தற்போதைய நிலையே தொடரட்டும். இதில் நாங்கள் கருத்து சொல்ல போவதில்லை, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+