தலைமை நீதிபதி இடமாற்றம்.. பின்னணியில் யார்? மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் புகாரால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாக மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் தெரிவித்தார்.

Recommended Video

    தலைமை நீதிபதி இட மாற்றத்தில் மத்திய அரசுக்கு தொடர்பு உள்ளது - மூத்த வழக்கறிஞர் குற்றச்சாட்டு

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளார் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்.

    தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜியை இடமாற்றம் செய்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலேஜ்ஜியம்) பரிந்துரை செய்த நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    வழக்கறிஞர்கள்

    வழக்கறிஞர்கள்

    இந்த விவகாரத்தில் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்பட பல்வேறு வழக்கறிஞர்களின் சங்கங்கள் சஞ்சீப் பானர்ஜியின் இடமாற்ற நடவடிக்கை குறித்து சந்தேகம் எழுப்பியுள்ளன.

    கண்டன ஆர்ப்பாட்டம்

    கண்டன ஆர்ப்பாட்டம்

    சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் முடிவை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற ஆவின் வளாகம் முன்பு அனைத்து ஜனநாயக ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50ற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

    அடிக்கடி இடமாற்றம் ஏன்

    அடிக்கடி இடமாற்றம் ஏன்

    அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத், அரசியலமைப்பின் சேவகர்களை இவ்வாறாக பணியிட மாற்றம் செய்து கொண்டே இருந்தால் நீதிபதிகள் இருப்பார்கள் ஆனால் நீதிமன்றம் இருக்காது. கொலிஜியம் முதல்முறையாக அரசியல் சாசனத்தில் இல்லாத அதிகாரத்தை செயல்படுத்தி வருவதாகவும், அடிக்கடி இட மாற்றம் என்பது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

    பலி ஆடு

    பலி ஆடு

    நேர்மையான தீர்ப்பு வழங்கியதன் காரணமாக பலி ஆடு விட்டதாகவும், முக்கிய தீர்ப்பு வழங்கியவர்கள் அனைவருமே பலியாகியுள்ளனர்.
    தலைமை நீதிபதியை எதற்காக பணியிட மாற்றம் செய்தார்கள் என்பதை விளக்க வேண்டும். மேலும், எந்தவொரு காரணமும் கூறாமல் மேகாலயா நீதிமன்றத்திற்கு மாற்றியது பயங்கரமான ஒன்று. எந்த ஒரு காரணமும் இல்லாமல் பணியிட மாற்றம் செய்தது சர்வாதிகாரம் போன்றது.

    விளக்கம் இல்லை

    விளக்கம் இல்லை

    இதற்கு முன் நீதிபதி தஹில் ரமாணியை மேகாலயா நீதிமன்றத்திற்கு நீதிபதியாக பணி மாற்றம் செய்தார்கள் ஆனால் அதை அவர், எதிர்த்தன் காரணமாக சிபிஐ விசாரணை நடைபெற்றது. அவரையும் எதற்காக இடமாற்றம் செய்தார்கள் என்பதை விளக்கவில்லை. இது அரசியல் சாசனத்திற்கு முரணாக உள்ளது. தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை இடமாற்றம் செய்ததில் மத்திய அரசினுடைய தலையீடு உள்ளதாகவும் என்.ஜி.ஆர்.பிரசாத். தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+