யாருமே போகாத நிலவின் தென் துருவத்தை ஆராய செல்லும் சந்திராயன் - 2.. இஸ்ரோ தலைவர் பெருமிதம்
Recommended Video
சென்னை: அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்படும் வளர்ச்சி தான் நாட்டின் உண்மையான வளர்ச்சி என்று இஸ்ரோ தலைவர் சிவன் கூறியுள்ளார்.
நாடு முழுவதுமிருந்து 108 மாணவர்களுக்கு இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக சிவன் தகவல் தெரிவித்துள்ளார். யுவிகா என்ற திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு 3 பேர் வீதம், 108 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு 2 வாரம் இஸ்ரோ பயிற்சி அளிப்பதாக தெரிவித்தார்.

யுவிகா மூலம் திறனுடைய மற்றும் தேடல் உள்ள மாணவர்களை இந்தியா முழுவதும் தேடி பிடித்து, அவர்களை இஸ்ரோ வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. அவர்களிடம் விஞ்ஞானியாக வர வேண்டும் என்ற உத்வேகம் இருப்பதாக கூறினார்.
மேலும் வரும் 22-ம் தேதி பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் மூலம் , ஆர்.எஸ்.ஆர் 2பி என்கிற செயற்கை கோள் நிலைப்பட உள்ளது என்றார். சந்திராயன்-2 செயற்கைகோளானது வரும் ஜூலை 16ம் தேதிக்குள் விண்ணில் செலுத்தப்படும்.
செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிறங்கும். யாருமே இதுவரை செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு சென்று தரையிறங்க உள்ள சந்திராயன் - 2 விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடும் என்றார்.
இதுவரை யாருமே ஆராயாத இடமாக இருப்பதால் பல புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. சந்திராயன்-1 நிலவில் நீர் உள்ளதாக கூறியது. அது போல சந்திராயன் 2 பல புதிய தகவல்களை நமக்கு தரும் என எதிர்பார்ப்பதாக நம்பிக்கை தெரிவித்தார்
சந்திராயன்-2 விண்கலத்தைத் தொடர்ந்து, அடுத்த முயற்சியாக சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா L1 என்ற விண்கலத்தை அனுப்புவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக சிவன் தெரிவித்தார். இதற்கு மிஷன் ஆதித்யா என பெயரிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
விண்ணில் மிதக்கும் விண்வெளி குப்பைகளை நிரந்தரமாக அகற்றுவதற்கு பல்வேறு வழிகளை இஸ்ரோ ஆராய்ந்து வருவதாக சிவன் தெரிவித்தார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications