ரூ 10 கோடி சொத்து வரி பாக்கி! சென்னையில் மத்திய அரசு நிறுவனத்திற்கு மாநகராட்சி நோட்டீஸ்!
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள மத்திய அரசுக்கு சொந்தமான போர்ட் டிரஸ்ட் அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சொத்து வரியை நிலுவையில் வைத்துள்ள தனியார் நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மீது சென்னை மாநகராட்சியின் வருவாய்த் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில் சென்னை பாரிமுனையில் அமைந்துள்ள மத்திய அரசின் போர்ட் டிரஸ்ட் அலுவலகம் சொத்து வரியை பாக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதுகுறித்து பல முறை தகவல் தெரிவித்தும் இன்னும் அந்த தொகை செலுத்தப்படவில்லை.
இந்த நிலையில் நிலுவையில் உள்ள 10.37 கோடி சொத்து வரியை செலுத்தவில்லை என்பதால் மத்திய அரசு அலுவலகமான போர்ட் டிரஸ்ட்டுக்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சொத்து வரி பாக்கியை செலுத்தவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
நிலுவையில் உள்ள தொகை செலுத்தவில்லை என்றால் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் சொத்து வரி செலுத்தாத மற்ற நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications