Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் "கைமாறிய" மனைவிகள்.. பனையூர் பண்ணையில் நெளிந்த ஆபாசம்.. அந்த "தம்பதி"யா? அதிர்ந்த போலீஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஈசிஆர் ரோட்டில், பனையூர் பண்ணை பங்களாவில் நடந்த சம்பவம், சென்னையையே அதிர வைத்து வருகிறது.. இதுகுறித்த விசாரணையிலும் போலீசார் இறங்கி உள்ளனர்.

சென்னையில் 3 வருடங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் நடந்தது.. நாம்கூட அதை பற்றி நிறைய செய்திகளை வெளியிட்டிருந்தோம்.. பணக்காரர்கள் எல்லாரும் சேர்ந்து, தங்களது மனைவிகளை மாற்றி கொள்ளும் நிகழ்வு ஒன்று நடந்தது. சென்னை ஈசிஆர் ரோட்டில் உள்ள ஸ்டார் ஹோட்டல், ரிசார்ட்டுகளில், இந்த சம்பவம் நடந்தது.

Chennai ECR Road incident and what happened in Chennai Panaiyur Farm house

கார் சாவி: அதாவது, எல்லா பணக்காரர்களும் ஜோடியாக இங்கு கூடுவார்களாம்.. அனைவரது கைகளிலும், அவர்களது கார் சாவி இருக்கும்.. பிறகு ஒன்றாக சேர்ந்து அந்த சாவியை குலுக்கலில் போடுவார்கள்..

பிறகு யார் கையில் எந்த கார் சாவி கிடைக்கிறதோ, அந்த சாவிக்குரிய மனைவியை மாற்றிக் கொள்வார்கள்.. ஜோடிகளை மாற்றி விளையாடும் இந்த ஆபத்தான, அசிங்கமான விளையாட்டு அம்பலமாகியதுமே, பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.

விநோத குலுக்கல்: 'மீவீ' என்ற ஆப் மூலம்தான் இந்த விளையாட்டு ஃபேஸ்புக்கில் நடந்தது.. குலுக்கல் முறையில் மனைவியை தேர்ந்தெடுத்ததும், அவர்களுடன் ஜாலியாக இருப்பது.. வேண்டுமானால் அதை போட்டோ, வீடியோவும் எடுத்து அவர்களுக்குள் ஷேர் செய்து கொள்வதுதான் இவர்களது வாடிக்கையாகவும் இருந்திருக்கிறது.

சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர் இந்த விளையாட்டில் கலந்து கொள்வதற்காகவே திரண்டு வருவார்களாம். இந்த சம்பவத்துக்கு பிறகும்கூட, ஈசிஆர் ரோட்டில் உள்ள சில வீடுகளில் பாலியல் அக்கிரமங்கள் நடந்து வருகின்றன.. போலீசாரும் உரியவர்களை கைது செய்து வருகிறார்கள். இப்போதும்கூட ஒரு கும்பல் சிக்கி உள்ளது.

பண்ணை வீடு: சென்னை, ஈசிஆர், பனையூரில் உள்ளது அந்த பண்ணை வீடு.. பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக இந்த வீட்டை, கோயம்புத்தூரை சேர்ந்த செந்தில்குமார் 45, ஜெயலட்சுமி 35, ஆகியோர் புக் செய்தனர். தங்களை தம்பதி என்றும் சொல்லிக் கொண்டனர்.
அதன்படியே, கடந்த 4ம் தேதி பிறந்த நாள் கேக்குடன் 2 பேரும், அந்த பண்ணை வீட்டுக்குள் நுழைந்தனர்.. கொஞ்ச நேரத்திற்கெல்லாம், வேறு 5 தம்பதியர்கள் உள்ளே நுழைந்தனர்.. அடுத்த சில மணி நேரத்தில், 13 பெண்கள், 20 ஆண்கள் என்று தனித்தனியாக உள்ளே நுழைந்தனர்..

கஞ்சா போதை: நைட் பார்ட்டி, மதுவிருந்துடன் ஆரம்பமானது.. ஆட்டம், பாட்டம் களைகட்டியது.. விடிய விடிய கூத்து நடந்தது.. பிறகு, மறுநாள் காலை 10 ஆண்கள் மட்டும் பண்ணை வீட்டிலிருந்து வெளியே சென்றனர்.. ஆனால், வேறு 7 பேர் உள்ளே நுழைந்தனர்.. இதனால், 2வது நாளும் ஆட்டம் பாட்டம் அமர்க்களப்பட்டது.. மது, கஞ்சா என விருந்து ஓடியது.. பிறந்த நாள் விழா என்று சொல்லிவிட்டு, 2வது நாளும் பார்ட்டி நடந்ததாலும், கஞ்சா புழக்கம் இருந்ததாலும், பண்ணை வீட்டு நிர்வாகத்திற்கு சந்தேகம் வந்தது..

உடனே தகவலறிந்த பள்ளிக்கரணை, விபசார தடுப்பு பிரிவு போலீசார் திடுதிப்பென்று அந்த பண்ணை வீட்டிற்குள் நுழைந்தனர்.. போலீசார் உள்ளே நுழைந்ததுமே, பெண்கள் அரைநிர்வாண கோலத்தில் இருந்தார்களாம். அங்கிருந்தவர்களிடம் விசாரணையும் ஆரம்பமானது..

பாலியல் தொழில்: இறுதியில், பர்த்டே என்று பண்ணை வீட்டை புக் செய்தது போலி தம்பதி என்று தெரியவந்தது.. செந்தில்குமார், ஜெயலட்சுமி இருவருமே பாலியல் தொழில் செய்து வருபவர்களாம்.. இந்த பாலியல் தொழிலில் ஈடுபட்ட டுபாக்கூர் தம்பதி உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.. அங்கிருந்த 8 பெண்களை மீட்டு காப்பகத்திலும் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து போலீசார் சொல்லும்போது, "செந்தில்குமார், ஜெயலட்சுமி 2 பேரும் தம்பதிக்கான அடையாள அட்டையை வாங்கி வைத்திருக்கிறார்கள்.. இவர்கள், ஃபேஸ்புக்கில் இதற்காகவே ஒரு பக்கத்தை உருவாக்க வைத்திருக்கிறார்கள்.. இந்த முகநூல்பக்கத்தில், ஆண்களிடம் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.. அதாவது, பார்ட்டிகள் நடத்தும்போது, மது விருந்து, கவர்ச்சி நடனம் இரண்டுமே கட்டாயம் இடம்பெறும்..

Chennai ECR Road incident and what happened in Chennai Panaiyur Farm house

நைட் பார்ட்டி: நைட் பார்ட்டி முடிந்ததும், தங்களுக்கு பிடித்த பெண்களுடன் ஜாலியாக இருக்கலாம் என்று முகநூல் பக்கத்தில் விளம்பரம் செய்திருக்கிறார்கள். இந்த விளம்பரத்தை பார்த்துமே, வலையில் வீழ்ந்த ஆண்களை இன்பாக்ஸ் வரவழைத்து, கட்டண விவரங்களை பேசுவார்கள்..

அதன்படி, ஒரு நபருக்கு 13,000 ரூபாய் முதல் 20,000 ரூபாய் வரை பணம் வசூலித்திருக்கிறார்கள்.. இந்த பனையூரிலும் அப்படித்தான் நடந்துள்ளது.. இதில், மனைவிக்கு தெரியாமல் வந்த ஆண்களையும், 8 பெண்களையும் எச்சரித்து அனுப்பினோம்.. அந்த முகநூல் பக்கத்தை முடக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர் போலீசார்

வார்னிங்: இந்த டுபாக்கூர் தம்பதி மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்கள்.. கடந்த 2018ம் ஆண்டு முதலே, முகநூலில் செபிவேல் என்ற பக்கத்தை உருவாக்கியிருக்கிறார்கள்..

கணவன் மனைவிகளை மாற்றிக் கொண்டு ஜாலியாக இருக்கலாம் என்பதுதான், இந்த முகநூல் பக்க கான்செப்ட். 8 பேரை கைது செய்துள்ளதுடன், இதில் மேலும் பல நபர்கள் சிக்கி உள்ளதால், அவர்களது உறவினர்களையும் வரவழைத்து, எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து அனுப்பியிருக்கிறார்கள் போலீசார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+