இது ஒன்னுதான் பாக்கி.. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரைத்தான் நாங்கள் அகற்றவில்லை.. நீதிபதிகள் சரமாரி
சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணமடைந்த விவகாரத்தில் பேனர் வைத்த முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் விரைவில் கைது செய்யப்படுவார் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பிடெக் முடித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கனடாவில் படிப்பதற்காக தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.

தண்ணீர் லாரி
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பள்ளிக்கரணைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்ற போது அவர் மீது பேனர் சரிந்து நிலைத்தடுமாறி விழுந்தார். அப்போது அவ்வழியாக வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

மருத்துவமனை
இது தொடர்பாக லாரி டிரைவரும், பேனர் அடித்த அச்சக உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் இந்த பேனரை வைக்கக் கூறிய முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் நெஞ்சுவலி என கூறிக் கொண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எடுக்கவில்லை
இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயகோபால் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய திமுக தரப்பு வழக்கறிஞர் ஜெயகோபால் ஆளும் கட்சியை சேர்ந்தவர் என்பதால்தான் அவர் மீது நடவடிக்கை இன்னும் எடுக்கப்படவில்லை என்றார்.

ஜெயகோபால்
சட்டவிரோதமாக ஜெயகோபால் பேனர் வைத்த நிலையில் அவர் மீது காவல் துறையினர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. வீதியில் இறங்கி விதிமீறல் பேனரை அகற்றும் பணியை மட்டும்தான் நீதிபதிகள் செய்யவில்லை. மற்றபடி அனைத்து உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளோம் என்றார். அப்போது விரைவில் ஜெயகோபாலை கைது செய்வோம் என தமிழக அரசு பதில் அளித்தது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications