கோர்ட் சொன்னதை செய்யலையே.. அரசுக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கு! தமிழக அரசை விளாசிய நீதிபதிகள்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீப தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் உத்தரவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரு நீதிபதிகள் அமர்வு முன்பு தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததோடு அரசு தனது கடமையை செய்ய தவறியது எனவும், உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக விமர்சித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில் மலை உச்சியில் உள்ள பழைய தீபத்தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், நேரடியாக மலை உச்சிக்கு சென்று ஆய்வு செய்ததுடன், அங்குள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவின் பேரில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டாலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறை முன்வைத்து, மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் தீபத் திருவிழா
அதற்கு மேலாக, 144 தடையுத்தரவும் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து பாஜகவினர், இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு, திருப்பரங்குன்றத்தில் பெரும் பரபரப்பு உருவானது. இந்த சூழ்நிலையில், தனி நீதிபதி சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழ்நாடு அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டு நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. விசாரணையில், தமிழக அரசு பல்வேறு முக்கிய வாதங்களை முன்வைத்தது.
ஜிஆர் சுவாமிநாதன்
குறிப்பாக, "தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், விதிகளுக்கு விரோதமாக நீதிமன்ற அவமதிப்பு மனுவை விசாரணைக்கு எடுத்துள்ளார். அவரது உத்தரவால் திருப்பரங்குன்றத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை வரம்பை மீறிய செயல்பாடாக இது கருதப்படுகிறது; எனவே அவர் அளித்த உத்தரவு ரத்து செய்யப்பட வேண்டும்" என்று அரசுத் தரப்பு வாதிட்டது.
விதிமீறல்
மேலும், "விளக்கம் அளிக்க மனுதாரருக்கு எந்த வாய்ப்பும் வழங்காமல் அவமதிப்பு வழக்கை உடனடியாக எடுத்துள்ளார். வழக்கை எடுத்த அதே நாளில் தண்டனை வழங்க இயலாது. உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டதா என அல்லது விளக்கம் கேட்பது தான் நடைமுறை; இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியாது" எனவும் தெரிவித்தது.
இந்து சமய அறநிலையத் துறை
அதேபோல், இந்து சமய அறநிலையத் துறை தரப்பு, "தீபத்தூண் 100 ஆண்டுகளாக பயன்படுத்தப்படுவதில்லை என்பதை நீதிபதியும் மனுதாரரும் ஏற்கெனவே ஒப்புக்கொண்டுள்ளனர். இத்தகைய சூழலில், வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கும்போது உடனடியாக தீபம் ஏற்ற உத்தரவு எப்படி அமல்படுத்தப்படும்?" என வாதம் முன்வைத்தது.
அரசின் மனு தள்ளுபடி
இதற்கு பதிலளிக்கும் வகையில், மனுதாரர் தரப்பு, "நீதிபதி உத்தரவை அறநிலையத்துறை அமல்படுத்தவில்லை" என குற்றம் சாட்டியது. இதை அடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் உத்தரவை மாலைக்கு ஒத்திவைத்தனர். இந்த நிலையில் மாலை சுமார் 4 மணியளவில் இந்த வழக்கின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில் காவல்துறை பாதுகாப்பை வழங்க தவறியதால் தான் மத்திய பாதுகாப்பு படை செல்ல நேரிட்டதாகவும், நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவில் விதிமீறல் இருப்பதாக தெரியவில்லை என நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். மேலும் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் அரசு தனது கடமையை செய்ய தவறிவிட்டது எனக் கூறிய நீதிபதிகள் அரசு உள்நோக்கத்தோடு இந்த வழக்கை தொடர்ந்துள்ள மனுவை தள்ளுபடி செய்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications