நாளை லீவ் கிடையாது.. சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!
சென்னை: சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை (ஜனவரி 10) செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
வங்கக்கடலில் இலங்கைக்கு மிக அருகில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயல் உருவானது. அதன்பிறகு இலங்கையின் பல்வேறு பகுதிகளை அதி கனமழையால் புரட்டி எடுத்தது. பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி பயணித்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி கடலிலேயே வலுவிழந்தது.

இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என படிப்படியாக வலு குறைந்தது. இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை, காஞ்சிபுரம் கடலோரப் பகுதியில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்தது.
3 நாட்களாக வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவி வந்ததால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
-
காது மடல் ஓட்டைகளுக்கு ஆபரேஷன்! சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கிய மும்பை இன்ஸ்டா பிரபலம் கைது! -
மாற்றி யோசித்த சென்னை குடிநீர் வாரியம்.. வேஸ்ட் தண்ணீரில் 551 கோடி ரூபாய் வருமானம்.. எப்படி ? -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
சென்னை ரிசார்ட்டில் பல் மருத்துவர் செய்த காரியம்.. ₹11 லட்சத்துக்காக பவர் பத்திரத்தில் ஆடிய ஆட்டம்! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
த்ரிஷா பற்றி விஜய் பாதுகாவலர் போட்ட போஸ்ட்.. மொத்த பிரச்சனைக்கும் பதில்! குவியும் கமெண்ட்ஸ் -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம்












Click it and Unblock the Notifications