நாளை லீவ் கிடையாது.. சென்னையில் அனைத்து பள்ளிகளும் செயல்படும்.. வெளியானது முக்கிய அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளும் நாளை சனிக்கிழமை (ஜனவரி 10) செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். டிசம்பர் 3 ஆம் தேதி தொடர் கனமழை எச்சரிக்கை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்ய நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் இலங்கைக்கு மிக அருகில் கடந்த நவம்பர் 27ஆம் தேதி டிட்வா புயல் உருவானது. அதன்பிறகு இலங்கையின் பல்வேறு பகுதிகளை அதி கனமழையால் புரட்டி எடுத்தது. பின்னர் தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி பயணித்து கடந்த நவம்பர் 30ஆம் தேதி கடலிலேயே வலுவிழந்தது.

Chennai schools holiday

இதையடுத்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி என படிப்படியாக வலு குறைந்தது. இது கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சென்னை, காஞ்சிபுரம் கடலோரப் பகுதியில் தொடர்ந்து ஆட்டம் காட்டி வந்தது.

3 நாட்களாக வட தமிழக கடலோர பகுதியை ஒட்டி நிலவி வந்ததால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு கனமழை வெளுத்து வாங்கியது. இதையொட்டி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 3 ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில், நாளை சென்னையில் பள்ளிகள் செயல்படும். வியாழக்கிழமை பாடவேளையை பின்பற்றி நாளை முழு பணி நாளாக செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+