உலக கோப்பையில் இந்தியா ஜெயிக்கிற மாதிரி.. முதல்வரும் ஜெயிக்க போகிறார்..காங். எம்எல்ஏ செல்வ பெருந்தகை
சென்னை: ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் எதோ முடியாட்சி நடப்பதை போல தொடர்ந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை பேசினார். மேலும், இந்திய அணி வெற்றி பெறுவதை போல நமது முதல்வர் வெற்றி பெற போகிறார் என்று பேசினார்.
நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்த மசோதாக்களில் சிலவற்றுக்கு விளக்கங்களைக் கேட்டு, ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார்.. இந்த 10 மசோதாக்களில் பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை என்று கூறப்படுகிறது. இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உடனடியாக சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை கூட்டி, மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இன்றைய தினம் 18ம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு சட்டசபை கூட்டம் கூடியது. இந்த சிறப்புக் கூட்டத்தில் ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதக்களை மீண்டும் தாக்கல் செய்து முதல்வர் மு.க ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தின் மீது எம்.எல்.ஏக்கள் பேசி வருகின்றனர். அந்த வகையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை பேசியதாவது:-
மாண்புமிகு பேரவைத் தலைவர்களே இன்னும் 10 நிமிடத்தில் சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற இருக்கிறது. எதற்காக இந்த சூரசம்ஹாரம் இந்த தமிழ்நாட்டில் நடக்கிறது. தமிழ் முருகர் கடவுள் தமிழ்நாட்டிற்கு படையெடுப்புகள் தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் அழிக்க வரும் போது முருக பெருமான் விழித்தெழுந்து சூரசம்ஹாரம் செய்த நாள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.
இந்த நாளில் முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு மட்டும் இன்றி இந்தியாவுக்கே வழிகாட்டும் தீர்மானத்தை கொண்டு வந்ததற்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். அப்படிப்பபட்ட தீர்மானத்தை கொண்டு வந்த சூரரை போற்றுகிறோம். பல முன்னுதாரணங்களை எம்.எல்.ஏக்கள் இந்த அவையில் எடுத்து வைத்தார்கள். இரட்டை நிலைப்பாடு... ஆட்சியில் இருந்தால் ஒரு நிலைப்பாடு. ஆட்சியில் இல்லை என்றால் ஒரு நிலைப்பாட்டை ஒரு தேசியக் கட்சி எடுத்து வந்துள்ளது.

முதல்வர் எதிர்க்கட்சியாக இருந்த போது என்ன நிலைப்பாடோ அதை ஆளும் கட்சியாக இருக்கும் போதே முன்னெடுத்து செல்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் பேரவையில் பேசினேன். நமது முதல்வர் நாகலாந்து முதல்வர் அல்ல.. தமிழ்நாட்டின் முதல்வர்.. அவரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொன்னது இன்று வரை அவைக்குறிப்பில் உள்ளது. ஆகவே உச்ச நீதிமன்றத்தை நாடி தமிழ்நாட்டு மக்களை பாதுகாக்கும் வேலையில் முனைப்பாக செயல்பாட்டில் ஈடுபட்டு உள்ளார்.
ஆளுநரை பற்றி விமர்சிக்க வேண்டும் என்ற விருப்பம் இல்லை. பெருந்தன்மையை முதல்வரிடம் பார்க்கிறோம். ஒரு ஆளுநர் எதையும் பொருட்படுத்தாமல் எதோ முடியாட்சி நடப்பதை போல தொடந்து மாநில அரசுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு இருக்கிறார். மிகப்பெரிய அதிர்ச்சி என்னவென்றால் அவர் விளையாட்டு வேண்டும் என்றாலும் விளையாடட்டும்.. நாளை நமது இந்திய அணி வெற்றி பெறுவதை போல நமது முதல்வர் வெற்றி பெற போகிறார். இவ்வாறு அவர் கூறினார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications