Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Keezhadi: இந்தியாவிலேயே முதல் முறையாக.. கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கீழடியில் ரூ. 24.30 கோடி மதிப்பீட்டில், 4.5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்தியாவிலேயே முதல்முறையாக கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய மற்றும் மாநில தொல்லியல் துறைகள் இணைந்து பல கட்டங்களாக அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த அகழாய்வுகளில் பண்டைய தமிழர்களின் குடியிருப்புகள், கட்டிட அமைப்புகள், கருவிகள், மண்பாண்டங்கள், ஆபரணங்கள் உள்ளிட்ட பல முக்கிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.

CM MK Stalin Inaugurates India s First Open-Air Museum at Keezhadi

இந்த ஆய்வுகள் தமிழர் நாகரிகம் மிகப் பழமையானதும், முன்னேறிய நகர்ப்புற வாழ்க்கை முறையுடனும் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்தன. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, அகழாய்வு நடைபெற்ற பகுதிகளை அப்படியே பாதுகாத்து பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வர தமிழக அரசு முடிவு செய்தது.

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 67,348 சதுர அடி பரப்பளவில் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற கீழடியில் அகழாய்வுகளின்போது, கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள்கள் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட அருங்காட்சியத்தில் காட்சிப்படுத்தப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த அருங்காட்சியத்துக்கு வந்து தொல்பொருள்களை பார்வையிட்டுச் செல்கின்றனர்.

மேலும், கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்.

இந்தியாவிலேயே முதன் முறையாக கீழடியில் ரூ. 22 கோடி ரூபாய் செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைந்துள்ளது. பண்டைய கால மக்களின் வாழ்வியல் முறைகள், பணிகள், அணிகலன்கள் உள்ளிட்டவைகளை பொது மக்கள் நேரில் காண உள்ளனர்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியம் முன் அலங்காரத் தோரண வாயிலும், அருங்காட்சியகத்தைப் பார்வையிட வரும் பார்வையாளர்கள் நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள 'கீழடி நம் தாய்மடி' என்ற வாசகத்துடன் தென்னை மரத்துடன் கூடிய செல்ஃபி பாயிண்ட்டும் தொல்லியல் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+