இரவில் எனக்கு வந்த தகவல்! நம்ம கிட்டயே கருப்பு ஆடு இருக்கு! அமைச்சர்களுக்கு ஸ்டாலின் திடுக் வார்னிங்
சென்னை: சமீபத்தில் நடந்த தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளாராம்.
சமீபத்தில் தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்தது. அமைச்சரவை முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, புதிய கொள்கையானது 1,076 கிமீ கடற்கரையை கொண்ட மாநிலம் முழுவதும் சுமார் 17 சிறிய துறைமுகங்களை மேம்படுத்த உதவும் என்றார்.

எங்கெல்லாம் தொழிற்சலைகள்: தைவானின் ஹாங்ஃபு நிறுவனம், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கத்தில் மிகப்பெரிய தோல் அல்லாத உற்பத்திப் பிரிவை அமைக்கும். செயிண்ட் கோபேன் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரு புதிய உற்பத்தி ஆலையைக் கட்டும். பிரெஞ்சு கண்ணாடி தயாரிப்பாளர் அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகத்தில் சோலார் கிளாஸ் மற்றும் கண்ணாடி கம்பளி உட்பட பல்வேறு வணிகங்களில் 3,400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது.
தென் கொரிய நிறுவனமான Seoyon E-Hwa Mobility, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் EV உதிரிபாக உற்பத்தி அலகு ஒன்றை அமைக்கும், இது மாநில அரசாங்கத்தால் மின்சார வாகன உற்பத்திக்கான மையமாக கணிக்கப்படுகிறது.
தமிழ்நாடு மாநிலத்தில் மைலான் லேபரட்டரீஸ், சுந்தரம் ஃபாஸ்டெனர்ஸ் மற்றும் இன்டர்நேஷனல் ஏரோஸ்பேஸ் மேனுஃபேக்சரிங் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் முதலீடுகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளன. ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் கூட்டு முயற்சியான ஐஏஎம்பிஎல், பெங்களூரு அருகே ஓசூரில் தனது உற்பத்தி வசதியை விரிவுபடுத்தவுள்ளது.
எட்டு திட்டங்களுக்கு ரூ.7,108 கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான தொகுப்புகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. முதலீடுகள் மூலம் 22,536 பேருக்கு வேலை கிடைக்கும், என்று அறிவித்துள்ளார். அதன்படி சிறிய துறைமுகங்களுக்கு அதிக தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு மாநில துறைமுக மேம்பாட்டுக் கொள்கை 2023க்கு ஒப்புதல் அளித்துள்ளது. கப்பல் கட்டுதல், மறுசுழற்சி மற்றும் துறைமுக நடவடிக்கைகளில் தனியார் துறையின் ஈடுபாட்டை அதிகரிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மின்சார வாகன (EV) பாகங்கள், காலணிகள், கண்ணாடி உற்பத்தி மற்றும் விண்வெளித் துறைகள் உட்பட 22,000 க்கும் மேற்பட்ட வேலைகளை உருவாக்கும் 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான எட்டு முதலீட்டுத் திட்டங்களுக்களின் தொகுப்புகளுக்கு தமிழ்நாடு அமைச்சரவை செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
ஸ்டாலின் எச்சரிக்கை; இந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளாராம். லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள். கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள். சில அமைச்சர்களை குறிப்பிட்டு பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள்
எனக்கு இது தொடர்பாக இரவில் அடிக்கடி முக்கிய தகவல்கள் வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் ரெய்டை எதிர்பாருங்கள். சில அதிகாரிகள் அரசுக்கு எதிராக மேலே தகவல் அனுப்புகிறார்கள். நமக்கு எதிராக காய் நகர்த்துகிறார். மாநில அதிகாரத்தில் இருக்கும் சிலரே கருப்பு ஆடுகள் போல செயல்படுகிறார்கள்.
இதனால் முக்கியமான முடிவுகளை டாப் சீக்ரெட்டாக எடுங்கள். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் முக்கியமான முடிவுகளை முடிந்த அளவு ரகசியமாகவே எடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் இந்த மீட்டிங்கில் உத்தரவிட்டுள்ளாராம்.












Click it and Unblock the Notifications