இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு.. விலை உயர்த்தியதில் முறைகேடு? சென்னையில் போலீஸ் குவிப்பு!
சென்னை: சென்னையில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் இந்திய வணிக போட்டி ஆணைய அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தாய் நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தில் இன்று காலை முதலே இந்திய வணிக போட்டி ஆணையத்தின் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சிமெண்ட் விலை நிர்ணயிப்பதிலும் கார்ட்டல் அமைத்து செயல்பட்டதாக இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் முறையற்ற வணிக போட்டியில் ஈடுபட்டது தொடர்பான புகாரில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் சக நிறுவனங்களுடன் இணைந்து தன் விருப்பதற்கு சிமெண்ட் விலையை உயர்த்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த ரெய்டில் சிமெண்ட் விலை உயர்த்தியதற்கும், குறைத்ததற்கும் முறையான ஆவணங்கள் இருக்கிறதா என்று சிசிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் பிற சிமெண்ட் நிறுவனங்களிலும் ரெய்டு செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் 75வது ஆண்டு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications