வாங்க குட்டீஸ்.. சம்மரை சூப்பரா கொண்டாடலாம்.. உங்களுக்காகவே விதம் விதமான போட்டிகள்
சென்னை: சென்னை போரூரில் ஸ்ரீ ஹையகிரிவர் கலை மற்றும் பண்பாட்டு மையம் தமிழ் புத்தாண்டு முன்னிட்டு " 5 ஆம் ஆண்டு சித்திரை கலை விழா" நடத்துகிறது
இதில் குழந்தைகளுக்காக பாட்டு போட்டி, ஓவிய போட்டி மற்றும் பேச்சு போட்டி நடை பெற உள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நுழைவுக் கட்டணம் கிடையாது.

இந்த நிகழ்ச்சி நமது இளைய தலைமுறையினருக்கு தமிழ்மொழியின் மீது ஆர்வம் வர வேண்டும் என்பதற்காக நடத்தப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் மாணவ மாணவிகள் ஏப்ரல் 12 தேதிக்குள் தங்கள் வருகையை தொலைபேசி மூலம் பதிவு செய்ய வேண்டும்.
தேதி: 14 ஏப்ரல் 2019
கிழமை: ஞாயிறு
உங்கள் குழந்தைகளுடன் வந்து கலந்து கொண்டு தமிழ் புத்தாண்டை தமிழுடன் கொண்டாடுங்கள்
பங்குபெறும் அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு சான்றிதழ் மற்றும் பதக்கமும் வழங்கப்படும்
மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ள- திருமதி ராஜலட்சுமி 824 837 5030 / 9840744266 /7299949515













Click it and Unblock the Notifications