கொரோனா பாதிப்பு.. இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா பரவலை தடுப்பதுதொடர்பாக இன்று மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

Recommended Video

    தமிழகத்தில் 22 மாவட்டங்களில் லாக்டவுன் தளர்வு செல்லாது

    தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக உயர்ந்துள்ளது.

     Coronavirus: Chief minister edappadi Palanisamy meeting with District Collectors today

    தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக திருவள்ளூர், நாகப்பட்டினத்தில் தலா 7 பேருக்கும் , ஈரோட்டில் 6 பேருக்கும் சென்னையில் 5 பேருக்கும், செங்கல்பட்டு சேலத்தில் தலா 3 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவாரூரில் 2 பேருக்கும், திருநெல்வேலி, தேனி, தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரியில் தலா ஒருவருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்திய அளவில் தமிழகம் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதையடுத்து கொரோனாவை தடுக்க ஒவ்வொரு மாவட்ட வாரியாக செய்ய வேண்டிய பணிகள், செய்து வரும் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முடிவு செய்துள்ளார்.

    காணொளி காட்சி மூலம் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள். சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்தபடி முதல்வர் பழனிச்சாமி ஆலோசனை நடத்த உள்ளார். இதில் பல்வேறு விவகாரங்ள் குறித்து விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+