கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு? வியாபாரிகள் எதிர்ப்பு.. நாளை முக்கிய முடிவு
சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை வியாபாரிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
Recommended Video
சென்னை கோயம்பேடு சந்தையில் 4000 காய்கறிக் கடைகள், 3500 பழக்கடைகள், 2500 மலர்க் கடைகள் என மொத்தம் 10,000 கடைகள் உள்ளன. அந்தக் கடைகளில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். அங்கு மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மட்டும் 30,000 பேர் உள்ளனர்.

அத்துடன் வெளியிலிருந்து காய்கறி வாங்க வரும் வணிகர்கள், கோயம்பேடு சந்தையை நம்பி பிற வணிகம் செய்வோர் என சுமார் ஒரு லட்சம் பேர் தினமும் காய்கறி வணிகம் செய்கிறார்கள். இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி விற்பனை செய்து வரும் வணிகர் ஒருவர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து அவரது குடும்பத்தினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவி உள்ளது. அத்துடன் கோயம்பேடு சந்தையில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே சனிக்கிழமை அன்று முழுஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமனித இடைவெளி இன்றி கோயம்பேடு சந்தையில் குவிந்து காய்கறிகளை வாங்கி குவித்தனர். இதனால் பலருக்கும் கொரோனா பரவுமோ என்ற அச்சம் ஏற்பட்டது.
இந்நிலையில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டதாலும் கொரோனா பரவியதாலும், கோயம்பேடு சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். தற்காலிகமாக கேளம்பாக்கம் மற்றும் மாதவரம் பகுதிக்கு கோயம்பேடு சந்தை மூன்றாக பிரித்து வேறு வேறு அமைக்கவும் ஆலோசனை நடந்தது. ஆனால் வியாபாரிகள் கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் விஸ்வநாதன் அவர்களிடம் பேசும் போது, மேலும் 4 பேருக்கு கொரோனா பரவி நிலையில் கோயம்பேடு சந்தையை உடனே மூட வேண்டியது வரும் என்றார். இதற்கிடையில் பேச்சவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் நாளை முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.
சென்னையில் மக்கள் கோயம்பேடு சந்தைக்குச் செல்வதைத் தவிர்த்து, அந்தந்தப் பகுதிகளுக்கு வரும் நடமாடும் கடைகளிலும், ஆன்லைனிலும் காய்கறிகளை வாங்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தி வருகிறது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications