தி.மு.க எம்பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி!
சென்னை: தி.மு.க எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வடக்கு மண்டலத்தில் அதிமுக ஆதிக்கம்.. திமுகவின் கையும் ஓங்குகிறது..5-ல் செம போட்டி.. தந்தி டிவி சர்வே
தி.மு.க. எம்.பி.யும், மகளிரணி செயலாருமான கனிமொழி தி.மு.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் தி.மு.க. எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தான் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுளளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.
பம்பரமாக சுழன்று வரும் கொரோனா
தமிழகம் முழுவதும் தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். மக்கள் மனதில் இடம் பிடித்து விட வேண்டும் என்று பம்பரமாக சுழன்று வருகின்றனர். இது புறமிருக்க கடந்த ஒரு ஆண்டுகளாக நம்மை அச்சறுத்தி வரும் கொரோனா தொற்றும் தமிழகம் முழுவதும் மீண்டும் பம்பரமாக சுழன்று வருகிறது.
சென்னையில் அதிக பாதிப்பு
தமிழகத்தில் சுமார் 5 மாதங்களுக்கு பிறகு தினமும் 3000-க்கு மேல் கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. சென்னையில் மட்டும் 1,000-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டு கொரோனா விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்கிற அச்சத்தில் மக்கள் உள்ளனர். தேர்தலுக்கு பிறகு கசப்பான அனுபவங்களை எதிர்கொள்ள தயாராகுங்கள் என்று சென்னை ஆணையரும் உறுதிபடுத்தி விட்டார்.
கனிமொழிக்கு கொரோனா
தேர்தல் பிரசாரங்களில் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் ஈடுபட்டு வருவதால் அவர்களையும் கொரோனா தொற்று தாக்கி வருகிறது. தே.மு.தி.க.வின் எல்.கே.சுதீஷ், மக்கள் நீதி மையம், தி.மு.க, அ.தி.மு.க வேட்பாளர்கள் சிலருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. எம்.பி.யும், மகளிரணி செயலாளருமான கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தனிமைபடுத்திக் கொண்டுள்ளார்
தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கனிமொழி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தான் வீட்டில் தனிமை படுத்திக் கொண்டுள்ளதாக கனிமொழி தெரிவித்துள்ளார்.