நீதித்துறையில் பேரபாயம் ஏற்பட்டிருக்கிறது... எச்சரிக்கை விடுக்கும் முத்தரசன்
சென்னை: தமிழ் தெரியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளாகும் பேரபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
மத்திய அரசும், பாஜகவும் ஆர்.எஸ்.எஸ்.கட்டுப்பாடில் இயங்குவதாகவும், அதன்படி அரசின் அதிகாரத்தைக் கொண்டு அரசுத்துறைகளில் மதவாத சக்திகளை பணியமர்த்தும் வேலையில் ஆர்.எஸ்.எஸ்.ஈடுபட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்துராஷ்டிராவை கட்டமைக்கும் தீய நோக்கத்துடன் மத்திய பாஜக அரசு நீதித்துறையில் தலையிடுவதை தீவிரப்படுத்தியுள்ளதாக புகார் கூறியிருக்கிறார்.

தமிழ் எழுத படிக்கத் தெரியாதவர்கள் தமிழகத்தில் உள்ள கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளாக பணியாற்ற வழிவகுக்கும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரியது எனக் கூறியிருக்கிறார். மேலும், தமிழ் தெரியாத, அரைகுறை தமிழ் தெரிந்த கீழமை நீதிமன்ற நீதிபதிகளால் எண்ணிப்பார்க்க முடியாத எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
நீதித்துறையின் கட்டமைப்பையும், பரிபாலின முறையையும் சீர்குலைக்கும் மத்திய பாஜக அரசின் செயலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கடும் கண்டனத்தை பதிவு செய்து கொள்வதாக முத்தரசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில் சட்டம் பயின்ற , சட்டம் பயில்கின்ற தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்க வழிவகை செய்வதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
தமிழர்களின் சமூக பழக்க வழக்கம், மரபுகளை உள்வாங்க முடியாதவர்கள் கீழமை நீதிமன்றங்களின் நீதிபதிகளாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கூறிய முத்தரசன், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தனது அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications