8 மாவட்டங்களில் "அதீத" கன மழை.. 7 மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் புயல் சுழன்றடிக்கும்- வார்னிங்
சென்னை: நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் நாளை அதிகபட்சம் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Recommended Video
வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், புதுச்சேரிக்கு 410 கிலோ மீட்டர் தொலைவிலும், சென்னைக்கு 450 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இன்று மதியம் நிலவரப்படி தொடர்ந்து மூன்று மணி நேரமாக ஒரே இடத்தில் புயல் நிலை கொண்டிருக்கிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக இது ஒரு மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மிக கன மழை
அதுமட்டுமின்றி, நாளை மாலை புதுச்சேரி அருகே புயல் கரையை கடக்கும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியிலும் இன்று புயல் காரணமாக நல்ல மழை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

8 மாவட்டங்களில் அதீத கன மழை
8 மாவட்டங்களில் நாளை அதீத கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிகபட்சமாக மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று சுழன்று அடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

110 கி.மீ வேகத்தில் காற்று
மயிலாடுதுறை, நாகை, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று சுழன்று அடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் பாதுகாப்பான இடங்களில் தங்கி இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டிருக்கிறது.

இன்று அதீத கன மழை
நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதீத கன மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு, கடலூரில் இன்று மிக கனமழை பெய்யும். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் இன்று கனமழை பெய்யக்கூடும். இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications