எப்ஐஆரில் வேற இருக்கே.. திருப்புவனம் கொண்டு சென்றபோது அஜித்குமார் இறந்தாரா? வெளியான இறப்பு சான்றிதழ்
சென்னை: திருப்புவனம் அஜித்குமார் இறந்து 18 நாட்கள் ஆகியும் ஏன் இறப்புச்சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தவண்ணம் இருந்தது.. இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித் குமாரின் இறப்பு சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ளது..இது மிகுந்த சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. என்ன காரணம்?
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளி அம்மன் கோவில் காவலாளியாக தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் அஜித்குமார் (வயது 29) பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று இந்த கோவிலுக்கு காரில் நிகிதா என்ற பேராசிரியையும், அவருடைய அம்மாவும் சென்றுள்ளனர்..

அப்போது தன்னுடைய காரிலிருந்த சுமார் 10 பவுன் நகை மாயமானதாக கூறி திருப்புவனம் போலீசில் நிகிதா புகார் தந்தார்.. இதையடுத்து, அஜித்குமாரை போலீசார் அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விறுவிறு சிபிஐ விசாரணை
விசாரணையின்போது, அஜித்குமாரை கொடூரமாக தாக்கியதில் அவர் பரிதாபமாக இறந்தார்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீஸ்காரர்கள் கைது செய்யப்பட்டு மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
அஜித்குமார் கொலை குறித்து மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி, தனது அறிக்கையை மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்தார். மேலும், அஜித்குமார் வழக்கை சிபிஐயிடம் தமிழக அரசு ஒப்படைத்தது. இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்..
நிகிதா இருந்த அறை
அந்தவகையில், முதல்விசாரணையை, பத்திரகாளி அம்மன் கோவில் பின்புறம் கோசாலை பகுதியிலிருந்து துவங்கினார்கள்.. அஜித்குமார் தாக்கப்பட்டு, அது வீடியோவாக பரவிய காட்சிகளையும் அடுத்தபடியாக பார்வையிட்டனர்.
பிறகு கோவிலுக்கான வாகன நிறுத்தும் இடம், அப்பகுதியில் உள்ள தங்கும் விடுதி, மதுரை-ராமேசுவரம் சாலையில் தவளையாபுரம் கண்மாய் போன்ற இடங்களையும் பார்வையிட்டனர். காரணம், மேற்கண்ட இடங்களுக்கெல்லாம் அஜித்குமாரை, தனிப்படை போலீசார் அழைத்துச்சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. அதனால்தான், அந்த இடங்களில் சிபிஐ அதிகாரிகள் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்துக்கொண்டனர்.
பிறகு அஜித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன், நகைத் திருட்டு புகார் அளித்த நிகிதா இருந்த அறை உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு செய்தனர்..
இறப்பு அறிக்கை எங்கே
இவ்வாறாக சிபிஐ விசாரணை நடந்து வரும்நிலையில், அஜித்குமார் இறந்து 18 நாட்கள் ஆகியும் ஏன் இறப்புச்சான்றிதழ், இறப்பு அறிக்கை வழங்கப்படவில்லை என்ற சர்ச்சை எழுந்தது..
அஜித்தின் இறப்பு சான்றிதழ் ஆவணங்களை பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாக நேற்றைய தினம் புகாரும் அளிக்கப்பட்டது.. இறப்பு சான்று ஆவணங்களை திருப்புவனம் போலீசார் வழங்கவில்லை என்று அவரது சகோதரர் நவீன், மதுரை மாவட்ட கலெக்டரிடம் இந்த புகார் மனுவை அளித்திருந்தார். ..
ஆனால், இறப்பு அறிக்கை குறித்து ஆவணங்களை நேற்றே சுகாதாரத்துறையிடம் வழங்கிவிட்டதாக போலீஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
இறப்புச் சான்றிதழ் தாக்கல்
இதையடுத்து, திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய அஜித் குமாரின் இறப்பு சான்றிதழ், திருப்புவனம் காவல் நிலையத்தில் தயார் செய்யப்பட்ட இறப்பு அறிக்கையை சிவகங்கை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது..
திருப்புவனம் அரசு மருத்துவமனை வழங்கிய இறப்புச் சான்றிதழில், தனிப்படை போலீசாரால் தாக்கப்பட்ட அஜித்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
முரண்பட்ட அறிக்கைகள்
ஆனால், இந்த இறப்புச் சான்றிதழுக்கும், போலீசாரின் எஃப்ஐருக்கும் இடையே ஏகப்பட்ட முரண்கள் இருப்பதாக கூறப்படுகிறது.. அதாவது, திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அஜித்குமார் இறந்தார் என்று இறப்பு சான்றிதழில் உள்ளது.. ஆனால், காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார் பதிவு செய்திருந்த எஃப்ஐஆரில், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் இரவு 11.15 மணிக்கு அஜித்குமார் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்குமார் இறந்தது திருப்புவனம் மருத்துவமனையிலா? ராஜாஜி மருத்துவமனையிலா? அப்படியானால் எஃப்ஐஆரில் பதிவு செய்யப்பட்டது உண்மைக்கு மாறானதா? என்ற சலசலப்பு தற்போது கிளம்பியிருக்கிறது..
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications