சென்னை பஸ் பயணிகளுக்கு ஜாக்பாட் அறிவிப்பு! பேருந்து நிறுத்தங்களில் வருகிறது மிகப்பெரிய மாற்றம்
சென்னை: சென்னையில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் இனி பஸ் வரும் நேரத்தை அறிந்துகொள்ள வசதியாக டிஜிட்டல் தகவல் பலகை அமைக்கப்படுகிறது என்றும் இதற்கான பணிகள் தொடங்கி நடந்து வருகிறது என்றும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மாநகர போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை நகரம் முழுவதும் தினமும் நுற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கி வருகின்றன. இந்த பேருந்துகளின் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்து வருகிறார்கள். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள், அலுவலகம் செல்வோர் என பலரும் பேருந்து சேவையை நம்பியுள்ளனர்.

காலை மற்றும் மாலை போன்ற பீக் நேரங்களில் பேருந்துகள் எப்போது, போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளும் என்றே தெரியாத நிலை இருக்கும். இதனால் பயணிகள் பேருந்து வரும் திசையை நோக்கி பார்த்துக்கொண்டே இருப்பதை பேருந்து நிறுத்தங்களில் தினமும் காண முடியும். நேரம் செல்ல செல்ல பேருந்து எங்கு வருகிறதோ.. சரியான நேரத்தில் வந்துவிடுமா என்றெல்லாம் யோசிக்க தூண்டும்.
"சென்னை பஸ்" செயலி: பஸ் குறிப்பிட்ட நேரத்தில் வந்தால்தானே... அலுவலகத்திற்கு செல்ல முடியும் என பதைபதைப்புடன் செல்போனில் நேரத்தையும் பேருந்தையும் எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். பயணிகளின் இந்த பரிதவிப்பை போக்க அண்மையில் 'சென்னை பஸ்' என்ற செயலியை போக்குவரத்து துறை அறிமுகம் செய்தது.
பஸ்கள் எங்கு வருகிறது: இந்த செயலியில் நகரப் பேருந்துகளின் எண்கள் பதிவு செய்தால் அது எந்த இடத்தில் தற்போது வந்து கொண்டிருக்கிறது நீங்கள் நிற்கும் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர இன்னும் எத்தனை நிமிடங்கள் ஆகும் என்பதை துல்லியமாக அறிந்துகொள்ளலாம். இந்த திட்டம் கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. அரசு விரைவு பேருந்துகள் வரும் இடத்தையும் இந்த செயலி மூலமாக அறிந்து கொள்ளமுடியும்.
இந்த செயலில் பஸ்கள் எங்கு வருகிறது என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்பதால் முன் கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்றார் போல் கிளம்பி வர முடியும். இந்த செயலியில் அவசர மற்றும் பாதுகாப்பு செய்தியை தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு உடனே ஒரு பொத்தான் (SOS) அழுத்தி தெரிவித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
டிஜிட்டல் தகவல் பலகை: இந்த செயலி பயணிகளுக்கு பெரும் வசதியாக உள்ள நிலையில், தற்போது பேருந்து நிலையங்களிலும் பஸ் வரும் இடத்தை அறிந்து கொள்ளும் வசதியை கொண்டு வர மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளதாம். அதாவது, பேருந்து நிறுத்தங்களில் அடுத்து வரும் பேருந்து எப்போது வரும் என மக்கள் அறியும் வகையில், டிஜிட்டல் தகவல் பலகைகளை பொருத்த சென்னை மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
பணிகள் நடைபெற்று வருகிறது: முதல் கட்டமாக 50 பேருந்துகளில் இதற்கான கருவியை பொருத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அடுத்த ஆண்டு ஜூலை மாதத்திற்குள் சென்னை முழுவதும் அமலுக்கு வரும் என்றும் மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications