நாடு முழுக்க வரும் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம்.. மொபைல் வாலட்டில் வரும் பணம்.. முழு விவரம்
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கு கீழ் மாதம் 35 கிலோ அரிசிக்கான தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,559.95-ம், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு கீழ் தலா ஒருவருக்கு மாதாந்திர 5 கிலோ அரிசிக்கான தொகையாக ரூ.222.85-ம் வழங்கப்படுகிறது. ஆனால் இனி பணமாக மக்களுக்கு கிடைக்காது டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இனிமேல் அந்த பணம் கூப்பன்போல் மத்திய அரசு அனுப்பும். அதனை வைத்து பொருள் மட்டுமே வாங்க முடியாது. வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. அந்த திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என புதுச்சேரியில் நடந்த விழாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறினார்.
புதுச்சேரி மாநிலத்தில் ரேஷன் அட்டை தாரர்களுக்கு ஏ.ஒய் (மிகவும் ஏழ்மையான குடும்பம்) திட்டத்தின் கீழ் மாதம் 35 கிலோ அரிசிக்கான தொகையாக குடும்பம் ஒன்றுக்கு ரூ.1,559.95-ம், பி.எச்.எச் (வறுமைக்கோட்டுக்கு கீழ்) திட்டத்தின் கீழ் தலா ஒருவருக்கு மாதாந்திர 5 கிலோ அரிசிக்கான தொகையாக ரூ.222.85-ம் மத்திய அரசின் பிரதான் மந்திரி கரிப் கல்யான் அன்ன யோஜனா திட்டம் மூலம் வழங்கி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசின் உதவித்தொகையானது உணவுப்பொருள் வாங்காமல் மற்றவைக்கு பயன்படுத்தப்படுவதாக புகார்கள் அதிகரித்தது. இதைத் தடுக்க உணவுப்பொருட்கள் மட்டும் பெறும் வகையில் பயனாளிகளுக்கு டிஜிட்டல் நாணயம் வழங்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்த திட்டம் குஜராத் மாநிலத்தில் முதலில் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.
புதுச்சேரியில் விழா
அடுத்தப்படியாக புதுச்சேரி மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது. இதற்காக மத்திய அரசின் நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை சார்பில் புதுச்சேரியில் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத் தொடக்க விழா கம்பன் கலையரங்கத்தில் நேற்று நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கலந்துகொண்டு டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
மத்திய அமைச்சர் பேச்சு
விழாவில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி பேசுகையில், "நமது நாட்டில் டிஜிட்டல் புரட்சியை பிரதமர் மோடி உருவாக்கி உள்ளார். இதில் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம் ஒரு மைல்கல். ஒவ்வொரு ரூபாயும் சரியான பயனாளிகளுக்கு சென்றடைய வேண்டும். வெளிப்படைத்தன்மையான இந்தத் திட்டத்தில் பணத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது. .
குஜராத் புதுச்சேரி
இந்தத் திட்டம் முதன் முதலாக குஜராத்தில் தொடங்கப்பட்டது. அடுத்து புதுச்சேரியிலும் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்து சண்டிகரிலும் செயல்படுத்த உள்ளோம். மொத்தம் 5 இடங்களில் செயல்படுத்தி திட்டத்தை ஆய்வு செய்து, பின்னர் நாடு முழுவதும் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
'e-ரூபாய்'
நாடு முழுவதும் டிஜிட்டல் ரேஷன் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயனாளிகளுக்கு நேரடியாகக் கையில் பணமோ அல்லது வங்கி கணக்கில் சாதாரணப் பணமோ வராது. அதற்குப் பதிலாக, 'e-ரூபாய்' எனப்படும் டிஜிட்டல் டோக்கன்கள் உங்கள் மொபைல் வாலட்டிற்கு வரும். மத்திய ரிசர்வ் வங்கி (RBI) மூலம் வழங்கப்படும் இந்த டிஜிட்டல் டோக்கன்கள் ஒரு 'டிஜிட்டல் கூப்பன்' போலச் செயல்படும்.
பொருட்களாகவே பெறலாம்
இந்த டோக்கன்களைக் கொண்டு நீங்கள் ரேஷன் கடையிலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட கடைகளிலோ பொருட்களைப் பெற்றுக்கொள்ளலாம். நீங்கள் வாங்கிய பொருளுக்கான தொகையை அந்த டோக்கன் மூலம் செலுத்தும்போது, அரசு நேரடியாகக் கடைக்காரருக்குப் பணத்தை அனுப்பிவிடும். இந்தத் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அந்த டிஜிட்டல் பணத்தை ரேஷன் பொருட்கள் வாங்க மட்டுமே பயன்படுத்த முடியும். வேறு எதற்கும் (உதாரணமாக மொபைல் ரீசார்ஜ் செய்யவோ அல்லது வேறு செலவுகளுக்கோ) அந்தப் பணத்தைப் பயன்படுத்த முடியாது.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications