விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன், தர்மபுரி தொகுதியில் இளங்கோவன், போளூர் தொகுதியில் சரவணன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்ற தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்ட நிலையில், அதில் சுதீஷ் போட்டியிட்டு ராஜ்ய சபா எம்பியாகினார். இதையடுத்து தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி தேமுதிகவுக்கு விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம், சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர் மற்றும் மயிலம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். அதேபோல் தருமபுரி தொகுதியில் இளங்கோவன், சேலம் மேற்கு தொகுதியில் மோகன்ராஜ், ஓமலூர் தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மயிலம் தொகுதியில் எல்.வெங்கடேசன், பல்லாவரம் தொகுதியில் முருகேசன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் தொகுதியில் பிரதாப் மற்றும் போளூர் தொகுதியில் சரவணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போளூர் தொகுதியில் அமைச்சர் எவ வேலு மகன் கம்பம் போட்டியிடுவதாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. போளூர் தொகுதியின் பொறுப்பாளராக கம்பன் பணியாற்றி வரும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ-வான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலசப்பாக்கம் தொகுதிக்கு மாறி இருக்கிறார். இதனால் போளூர் தொகுதியில் தேமுதிக வெல்வதற்கான வாய்ப்புகள் கூடி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications