விருத்தாசலத்தில் பிரேமலதா, விருதுநகரில் விஜயபிரபாகரன் போட்டி.. தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன், தர்மபுரி தொகுதியில் இளங்கோவன், போளூர் தொகுதியில் சரவணன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.
சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் முதல்முறையாக இடம்பெற்ற தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே ஒரு ராஜ்ய சபா சீட் அளிக்கப்பட்ட நிலையில், அதில் சுதீஷ் போட்டியிட்டு ராஜ்ய சபா எம்பியாகினார். இதையடுத்து தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.

இதன்பின் திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எந்த தொகுதிகள் என்ற அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், தொடர்ந்து 164 தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார். அதன்படி தேமுதிகவுக்கு விருத்தாசலம், விருதுநகர், தருமபுரி, குடியாத்தம், சேலம் மேற்கு, போளூர், பல்லாவரம், திருத்தணி, ஓமலூர் மற்றும் மயிலம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த், விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிடுகின்றனர். அதேபோல் தருமபுரி தொகுதியில் இளங்கோவன், சேலம் மேற்கு தொகுதியில் மோகன்ராஜ், ஓமலூர் தொகுதியில் இளங்கோவன் போட்டியிடுவதக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மயிலம் தொகுதியில் எல்.வெங்கடேசன், பல்லாவரம் தொகுதியில் முருகேசன், திருத்தணி தொகுதியில் கிருஷ்ணமூர்த்தி, குடியாத்தம் தொகுதியில் பிரதாப் மற்றும் போளூர் தொகுதியில் சரவணன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் போளூர் தொகுதியில் அமைச்சர் எவ வேலு மகன் கம்பம் போட்டியிடுவதாக பேசப்பட்டு வந்தது.
ஆனால் கடைசி நேரத்தில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டதாக தெரிகிறது. போளூர் தொகுதியின் பொறுப்பாளராக கம்பன் பணியாற்றி வரும் சூழலில், சிட்டிங் எம்எல்ஏ-வான அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் கலசப்பாக்கம் தொகுதிக்கு மாறி இருக்கிறார். இதனால் போளூர் தொகுதியில் தேமுதிக வெல்வதற்கான வாய்ப்புகள் கூடி இருப்பதாக பார்க்கப்படுகிறது.
-
அண்ணியின் கெத்து சிரிப்பு.. எரிச்சலான விசிக.. விருதாச்சலத்தில் முகம் மாறிய பிரேமலதா.. நடந்தது என்ன? -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க












Click it and Unblock the Notifications