திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் புதிதாக நியமனம்! மீண்டும் பதவி பெற்றார் செஞ்சி மஸ்தான்!
சென்னை: பல மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை நியமித்து திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஈரோடு, திருப்பூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்களில் அடங்கியுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீண்டும் விழுப்புரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் இருந்து வந்த தோப்பு வெங்கடாசலம், ஈரோடு மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும், ஆர். லட்சுமணன் விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியல் வருமாறு:
▪️ ஈரோடு தெற்கு - அமைச்சர் முத்துசாமி
▪️ ஈரோடு வடக்கு - என்.நல்லசிவம்
▪️ ஈரோடு மத்தி - தோப்பு வெங்கடாசலம்
▪️ திருப்பூர் கிழக்கு - க.செல்வராஜ்
▪️ திருப்பூர் மேற்கு - அமைச்சர் சாமிநாதன்
▪️ திருப்பூர் வடக்கு - என்.தினேஷ் குமார்
▪️ திருப்பூர் தெற்கு - இல. பத்மநாபன்
▪️ விழுப்புரம் வடக்கு - செஞ்சி மஸ்தான்
▪️ விழுப்புரம் தெற்கு - கெளதம சிகாமணி
▪️ விழுப்புரம் மத்தி - ஆர்.லட்சுமணன்
▪️ மதுரை வடக்கு - அமைச்சர் மூர்த்தி
▪️ மதுரை மாநகர் - கோ.தளபதி
▪️ தஞ்சாவூர் தெற்கு - பழனிவேல்
▪️ திருநெல்வேலி மத்தி - அப்துல் வகாப்
▪️ திருவள்ளூர் கிழக்கு - எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ்
▪️ நீலகிரி - கே.எம்.ராஜு














Click it and Unblock the Notifications