தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி.. மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: தேமுதிக துணை செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் மீண்டும் ஜெட் வேகத்தில் கொரோனா தொற்று உயர்ந்து வருகிறது.
ஒரு சில வாரங்களுக்கு முன்பு 500-க்குள் இருந்த பாதிப்பு தற்போது ஆயிரத்தை கடந்து சென்று விட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தற்போது அரசியல்வாதிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் கொரோனா அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை அரசியல்வாதிகளும், பொதுமக்களும் சரியாக கடைபிடிப்பதில்லை. இந்த நிலையத்தில் தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷீக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எல்.கே.சுதீஷ் வருகிற தேர்தலில் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications