Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளர்ந்தெழும் திமுக.. இன்று தமிழகம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டம்! திருவள்ளூரில் பேசுகிறார் ஸ்டாலின்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இன்று திமுக சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தமிழக அரசியல் பிரதிநிதித்துவத்தை குறைக்கும் பாஜக அரசின் அநீதியை மக்களிடம் கொண்டு சென்று, அதன் பேராபத்தை எடுத்துக் கூற வேண்டும் என்றும், தொகுதி மறுசீரமைப்பினால் பாதிக்கப்படப் போகும் மாநிலங்களை ஒன்றிணைத்து கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

dmk mk stalin Delimitation

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் இன்று மத்திய அரசுக்கு எதிரான கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தொகுதி மறுசீரமைப்பு, இந்தி திணிப்பைக் கண்டித்து மக்களிடம் எடுத்து கூறும் விதமாக "தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!" எனும் தலைப்பில் மாநிலம் முழுவதும் கண்டன பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என திமுக அறிவித்தது.

திருவள்ளூரில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேசுகிறார். அதேபோல், குடியாத்தத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் திமுக பொதுச் செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் பங்கேற்கிறார்.

மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மேற்கொள்வதை மக்களிடம் புரிய வைக்கும் வகையில் இந்த கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன. திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் தலைமையிலும், நாடாளுமன்ற, சட்டசபை உறுப்பினர்கள் முன்னிலையிலும் இந்த கண்டனப் பொதுக்கூட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.

திருச்சி பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு, திண்டுக்கல் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் பல்வேறு மாவட்டங்களில் நடைபெறும் கண்டன பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளவர்களின் பட்டியலையும் திமுக தலைமைக் கழகம் வெளியிட்டிருந்தது.

முன்னதாக தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தென் மாநில எம்.பிக்கள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முடிவு செய்யப்பட்டது. எம்பி-க்கள் கூட்டு நடவடிக்கை குழு குறித்து வரும் மார்ச் 22ல் ஆலோசனை நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின், தென் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+