பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்.. ஸ்டாலின் தலைமையில்.. ஆகஸ்ட் 13ஆம் தேதி திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்
சென்னை: திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் வரும் 13ஆம் தேதி மாலை 5 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மு க ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக திமுக அரசு தனது பட்ஜெட்டை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி தாக்கல் செய்யவுள்ளது. அதற்கு மறுநாள் தமிழ்நாடு சட்டசபையில் முதல்முறையாக வேளான் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது ஆகஸ்ட் 13ஆம் தேதி சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும்.
இந்தச் சூழலில் திமுக சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் வரும் வரும் 13ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடரில் திமுக எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அரசு தலைமை கொறடா கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம், வரும் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications