ராஜீவ்காந்தி கொலை வழக்கு.. 7 தமிழர்களும் நிச்சயம் விடுதலை.. திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி
Recommended Video

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வோம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்த ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

நிறைவேற்றுதல்
இவர்களது தண்டனை காலம் முடிந்தும் இன்னும் அவர்கள் விடுவிக்கப்படவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறுகையில் 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி முடிவு எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தனர்.

ஒப்புதல்
இதையடுத்து தமிழக அரசு 7 பேர் விடுதலை குறித்து சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அது ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இது வரை அதன் மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதே வேளையில் பஸ் எரிப்பு வழக்கில் சிறையில் இருந்த மூன்று பேரை மட்டும் நல்லெண்ண நடவடிக்கையில் விடுவிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

தேர்தல் அறிக்கை
இதையடுத்து 7 பேரையும் விடுதலை செய்ய அற்புதம்மாள் தலைமையில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் இன்றைய தினம் திமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது.

நல்ல அறிக்கை
அதில் ஸ்டாலின் கூறுகையில் சிறையில் பல ஆண்டுகளாக உள்ள 7 பேர் விடுதலை குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த அறிவிப்பும் தமிழர்கள் மட்டுமல்லாது உலகத் தமிழர்கள் மனதிலும் பாலை வார்க்கும் விதமாக உள்ளது.
-
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல்












Click it and Unblock the Notifications