துப்பாக்கியை காட்டி மிரட்டல்.. காவலாளி மீது கொலைவெறி தாக்குதல்.. அனிதா ராதாகிருஷ்ணன் பிஏ மீது வழக்கு
பில்லா ஜெகன் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது
சென்னை: திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் அரசியல் பிஏவுமான பில்லா ஜெகன் காவலாளி ஒருவரை துப்பாக்கியை காட்டி மிரட்டியதாகவும், அடித்து உதைத்ததாகவும் எழுந்த புகாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யார் இந்த பில்லா ஜெகன்? ஒரு குட்டி பிளாஷ்பேக்:
தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தவர் பில்லா ஜெகன். இவர் தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்ற தலைவரும்கூட.
ஆனால் அனைத்தையும் விட, தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணனின் அரசியல் பிஏ என்று இவரை கூறுகிறார்கள். சுருக்கமாக சொன்னால் இவர் அமைச்சரின் வலதுகரம் என்றும் சொல்கிறார்கள்.

லாரி ஷெட்
சொந்தமாக லாரி ஷெட் ஒன்றினை பில்லா ஜெகன் நடத்தி வருகிறார். கடந்த 2019ம் ஆண்டு சொந்த தம்பியை சொத்து தகராறில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததாக இவர் கைது செய்யப்பட்டார். அதோடுமேலும் பல அடி தடி வழக்குகளிலும் பில்லா ஜெகன் பெயர் முதல் குற்றவாளியாக உள்ளது. இதனால் இவரை குண்டர் சட்டத்தில் கூட கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். அந்த சமயத்தில் இவரை திமுகவில் இருந்து மு.க.ஸ்டாலின் சஸ்பென்ட் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

அனிதா ராதாகிருஷ்ணன்
அதன் பிறகு அனிதா ராதாகிருஷ்ணன் ரெகமன்டேசனில் திமுகவில் மறுபடியும் சேர்த்துக் கொள்ளப்பட்டதோடு, திமுக தலைமை செயற்குழு உறுப்பினராகவும் பில்லா ஜெகன் நியமிக்கப்பட்டார். எதிர்கட்சியாக இருந்த போது சொந்த தம்பியை சுட்டுக் கொலை செய்த புகாரில் கைது செய்யப்பட்ட பில்லா ஜெகன் மீது தற்போது தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையின் காவலாளியை துப்பாக்கியை காட்டி மிரட்டி அடித்து உதைத்ததாக புகார் எழுந்துள்ளது.

காவலாளி
சுற்றுலா மாளிகையின் காவலாளியாக சதாம் உசேன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 29 வயதாகிறது. நேற்று முன்தினம் மாலை, சதாம் உசேன் வழக்கம்போல் டியூட்டியில் இருந்துள்ளார். அப்போதுதான் பில்லா ஜெகன், தனது சொகுசு காரில் அங்கு என்ட்ரி தந்துள்ளார். அவருடன் மேலும் 5 பேர் இருந்தனர்.

மிரட்டல்
அங்கிருந்த சதாம் உசேனிடம், "தண்ணி அடிக்க போறோம்.. அதற்காக ரூம் ஒன்றை ஒதுக்கி தரணும்" என்று கேட்டுள்ளனர். ஆனால் ரூம் எதுவும் காலியாக இல்லை என்று சதாம் உசேன், கூறியிருக்கிறார். அதற்கு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை விசாரிக்கும் நீதிபதியின் ரூம் காலியாகத்தானே உள்ளது, அதனை தனக்கு கொடுக்கும்படி பில்லா ஜெகன் வலியுறுத்தியதாக சொல்லப்படுகிறது.

பிரத்யேக ரூம்
ஆனால் அது நீதிபதிக்கான பிரத்யேக ரூம், விசாரணை முடியும் வரை வேறு யாருக்கும் ஒதுக்க கூடாது என்று சதாம் எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் நீதிபதியின் அந்த ரூமை தங்களுக்கு திறந்து விடவேண்டும்" என்றும் பில்லா ஜெகன் மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த ரூமை வேறு யாருக்கும் ஒதுக்கிக் கொடுத்தால் தனக்கு வேலை போய்விடும் என்று சதாம் கெஞ்சியதாகவும் ஆனால் அதனை பொருட்படுத்தால் ஆத்திரம் அடைந்த பில்லா ஜெகன் & கோ, காவலாளி சதாமை அடித்து உதைத்து கல்லால் தாக்கியதாக தெரிகிறது.

சதாம் உசேன்
"அத்தோடு போலீசில் புகார் ஏதாவது தந்தால், துப்பாக்கியால் சுட்டு கடலில் தூக்கி போட்டு விடுவோம்" என்று துப்பாக்கியை காட்டி மிரட்டி விட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த சதாம் உசேன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிறகு நடந்த சம்பவம் குறித்து போலீசிலும் புகார் தந்துள்ளார்..இதையடுத்து, தெற்கு காவல் நிலைய போலீசார் பில்லா ஜெகன் உள்ளிட்ட 6 போ் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 8 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்..

பில்லா ஜெகன்
இப்போது பில்லா ஜெகன் மறுபடியும் தலைமறைவாகி உள்ளார். அவர் உட்பட 6 பேரையும் தேடும் பணி நடந்து வருவதாக போலீசார் கூறுகிறார்கள். ஆனால், பில்லா ஜெகன் முன்ஜாமீன் வாங்கும் வரை கைது நடவடிக்கை எடுக்க கூடாது என்று போலீசாருக்கு நெருக்கடி இருப்பதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் பில்லா ஜெகனை கட்சியில் இருந்து உடனடியாக சஸ்பென்ட் செய்து திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.

முத்துக்குமார்
ஏனென்றால் இதற்கு முன்பு அனிதாவின் உதவியாளர் கிருபா என்பவர் திருச்செந்தூரில் போலீஸ் கான்ஸ்டபிள் முத்துக்குமாரை கன்னத்தில் அறைந்த புகாரில் சிக்கினார். இது தொடர்பாக முத்துக்குமார் முதலில் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் பிறகு அதனை வாபஸ் பெற்றார். இதனால் அனிதாவின் உதவியாளர் கிருபா மீது அப்போது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை.

திமுக
ஆனால் தற்போது தூத்துக்குடியில் காவலாளியை தாக்கிய புகாரில் அனிதாவின் அரசியல் பிஏ பில்லா ஜெகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்தே அவரை கட்சியில் இருந்து திமுக மேலிடம் நீக்கியுள்ளது. ஆனால் பில்லா ஜெகனை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் விவகாரத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் தலையிடுவதை தடுக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் என்று திமுகவினரே கூறி வருகின்றனர்.
-
எடப்பாடி பழனிசாமியின் முன்னாள் தனிச் செயலர்.. இப்போது புதிய தலைமைச் செயலாளர்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
'இல்லத்தரசி' கூப்பன்.. ரெடியாகும் QR கோடு அஸ்திரம்.. ஸ்டாலின் கையில் எடுக்கும்.. பிரம்மாண்ட பிளான்! -
அன்புமணிக்கு டபுள் ஷாக்? வன்னியர் வாக்குகளில் பிளவு.. யாருக்கு லாபம்? பாமகவில் திருப்பம் -
தமிழக தலைமை செயலாளர் மாற்றம்.. வெட்கக் கேடானது! தேர்தல் ஆணையம் மீது முதல்வர் ஸ்டாலின் காட்டம் -
Corona: முதல்வர் ஸ்டாலினே கொரோனாவால் போயிருப்பார்! ஆனால்..! எடப்பாடி பழனிசாமி சர்ச்சை பேச்சு! -
எடப்பாடி ரொம்ப டென்ஷன் ஆகுறாரு.. இனி கெட்டவார்த்தையில் பேசுவார் போல! கலாய்த்த உதயநிதி -
செல்வந்தர் அதிமுக வேட்பாளர் ₹1000 கோடி.. தமிழக அமைச்சர்களின் மனைவியர் பெயரில் சொத்து மதிப்பு பாருங்க -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
62 தொகுதிகளில் சர்ஜிக்கல் திமுகவின் மெகா ஆபரேஷன்.. அதிமுகவுக்கு எதிராக ரகசியமாக இறங்கிய 2 டீம்? -
திமுக கொடுத்த சின்ன தோசை.. அப்செட்டில் ராகுல் காந்தி? பிரவீன் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் பேசறாரே -
“ராகுல் காந்தி தமிழ்நாட்டில் திமுக கூட்டணி ஜெயிக்கணும்னே நினைக்கலயா?”.. சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை -
திமுக கூட்டணிக்கு முக்கிய இயக்கம் ஆதரவு.. தேவேந்திர குல வேளாளர் ஓட்டுகளை அள்ளலாம்! யாருனு பாருங்க












Click it and Unblock the Notifications