குழந்தையின்மையா? பைசா செலவில்லாமல் அரசு மருத்துவமனையில் எண்ணற்ற சிகிச்சைகள்.. லிஸ்ட் போடும் Dr.தீபா
சென்னை: கர்ப்பப்பை குழாய்களில் அடைப்பு இருந்த பெண்ணுக்கு யோகா மற்றும் இயற்கை மருத்துவம் மூலம் இலவசமாக சிகிச்சை அளித்து அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது என கைநுட்பத் துறை மருத்துவர் ஒய் தீபா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் ஒய் தீபா கூறியிருப்பதாவது: திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தையின்மைக்காக (infertility) பெண் ஒருவர் சிகிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவருக்கு இரு கருப்பைக் குழாய்களிலும் அடைப்பு இருந்தது. இதற்காக அவருக்கு மருத்துவர்கள் லேப்ராஸ்கோப்பி சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
இந்த நிலையில் அந்த பெண் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனைக்கு வந்து என்னை சந்தித்தார். அப்போது அவரிடம் லேப்ராஸ்கோபி, மருந்து மாத்திரை இல்லாமலேயே இந்த கருப்பை குழாயில் உள்ள அடைப்பை சரி செய்ய முடியும் என்றேன்.

புறநோயாளி
என்னிடம் புறநோயாளியாக சிகிச்சைக்காக வந்த அந்த பெண்ணை சோதனை செய்ததில் ஒரு டியூபில் நீர் இருந்தது. மற்றொரு டியூபில் மொத்தமாக அடைப்பு இருந்தது. குழந்தையின்மைக்கு ஐயூஎஃப் சிகிச்சைகள் மூலமாகத்தான் கருத்தரிக்க முடியும் என கூறியிருந்ததாக அந்த பெண் என்னிடம் சொன்னார். இதையடுத்து மருத்துவமனையில் 20 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள் சரியாகிவிடும் என்றேன்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவம்
அவருக்கு நான் கூறியது போல் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அவருக்கு இயற்கையான உணவுகள் கொடுக்கப்பட்டன. மேலும் இடுப்பு குளியல், மண் குளியல், வாழை இலை குளியல், களிமண் குளியல் ஆகிய சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டன.

மூச்சு பயிற்சி
அது போல் பிராணயாமம், மூச்சு பயிற்சி, அக்குபஞ்சர், விதை சிகிச்சை உள்ளிட்டவை அவருக்கு கொடுக்கப்பட்டது. விளக்கெண்ணெய் சிகிச்சையும் அவருக்கு அளிக்கப்பட்டது. இந்த சிகிச்சைகளுடன் இயற்கை உணவையும் அவர் எடுத்துக் கொண்டார். 20 நாட்கள் கழித்து வீட்டுக்கு அனுப்பினோம். அங்கும் அவரை இயற்கையான உணவை எடுத்து வர சொன்னேன்.

மண் குளியல்
மண் குளியலுக்கு பதிலாக டர்க்கி டவலை மடித்து வயிற்றின் மீது அரை மணி நேரம் வைத்த வர சொன்னேன், அதனுடன் இடுப்பு குளியலையும், யோகாவையும் செய்ய கூறினேன். இதனால் அந்த பெண் கருத்தரித்தார். அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவரது பரிந்துரையின்பேரில் இவருக்கு தெரிந்த குழந்தையின்மைக்கு சிகிச்சை பெறுவோரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களும் தற்போது கருத்தரித்து நார்மல் டெலிவரி ஆகியுள்ளது.

ரத்த கட்டி
என்டோமெட்ரோசிஸ் எனப்படும் ரத்த கட்டி, கருப்பை குழாயில் அடைப்பு, மாதவிடாய் காலத்தில் உதிரம் அதிகமாக போவதால் ஹார்மோன் சமநிலையின்மையால் பிசிஓடி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினை இருக்கிறவர்களுக்கு இயற்கை மருத்துவம் மூலம் மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை இல்லாமல் இயற்கையாகவே கருத்தரிக்கலாம். கருப்பையில் கட்டி இருப்பவர்களும் கருத்தரிக்கலாம் என தீபா தெரிவித்துள்ளார்.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications