டிரைவிங் லைசென்ஸ் காலாவதி தேதியை உடனே செக் பண்ணுங்க.. முக்கிய காரணம் இருக்கு
சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்தின் படி ஓராண்டிற்குள் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். முன்பு ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க 5ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில் ஓராண்டாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது.
அண்மையில் மோட்டார் வாகன திருத்தசட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.
இந்த சட்டத்தின் படி நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகிறது.

5வருட அவகாசம்
இந்த சூழலில் இதுவரை தமிழகத்தில் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கத் தவறினால் அதைப் புதுப்பிக்க 5 ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது.

ஓரு வருடம் மட்டுமே
புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு வந்தததை தொடர்ந்து ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் இப்போது ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்காவிட்டால் கட்டணம்
அப்படி ஒரு வேளை ஒரு ஆண்டுக்குள் புதுப்பிக்க தவறினால் மீண்டும் முதலில் இருந்து ஓடடுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணத்தை ஆன்லைனில் இனி செலுத்த வேண்டும்.

அதிகாரிகள் தகவல்
இந்த புதிய நடைமுறை தமிழகம் முழுவதும் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களிலும் அமலுக்கு வந்திருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காலவதி தேதியை பாருங்க
எனவே ஒருவேளை உங்கள் ஓட்டுநர் உரிமத்தின் (டிரைவிங் லைசென்ஸ்) காலாவதி தேதியை நீங்கள் கவனிக்காமல் இருந்தால் கொஞ்சம் கவனித்து பார்த்து உரிய காலத்தில் புதுப்பித்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால், அதற்காக பெரிய தொகையை இழக்க வேண்டியது வரும்.












Click it and Unblock the Notifications