சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு.. தொழிலதிபர் தொடர்புடைய 10 இடங்களில் சோதனை!
சென்னை: சென்னையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கே.கே.நகர், தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அரவிந்த் என்பவருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளிட்ட 10 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். தொழிலதிபர் அரவிந்த் மருந்து தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வரும் நிலையில், சட்டவிரோத பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து இந்த அதிரடி சோதனை நடப்பதாக தெரிகிறது.

புரசைவாக்கத்தில் உள்ள அரவிந்த் வீட்டிற்கு 2 வாகனங்களில் வந்த 8 அமலாக்கத்துறை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர். சோதனைக்குப் பிறகே இதுகுறித்த முழுமையான தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications