தீர்ப்பு தந்த உற்சாகம்! ஜெயலலிதா பிறந்தநாள் பவள விழா மாநாடு! எடப்பாடி பழனிசாமி போடும் மெகா திட்டம்!
ஜெயலலிதா 75வது பிறந்தநாள் பவள விழா மாநாடு பற்றி எடப்பாடி பழனிசாமி யோசனை.
சென்னை: அதிமுக பொதுக்குழு வழக்கில் கிடைத்த தீர்ப்பை தொடர்ந்து மிகுந்த உற்சாகத்துடன் காணப்படும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதா பிறந்தநாள் பவள விழா மாநாட்டை நடத்தவும் திட்டமிட்டு வருகிறார்.
இதன் மூலம் சோர்ந்து கிடக்கும் அதிமுக தொண்டர்களை எழுச்சி பெற வைக்கவும், உற்சாகம் கொள்ள வைக்கவும், தனது பலத்தை மீண்டும் டெல்லிக்கு நிரூபிக்கவும் மாநாடு பயன்படும் என நினைப்பதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு இது தொடர்பாக மேலும் விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிரித்த முகம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் தனக்கு சாதகமான தீர்ப்பு வந்த நொடி முதல் சிரித்த முகத்துடன் பூரிப்பாக காணப்படுகிறார் எடப்பாடி பழனிசாமி. தன்னை சந்திக்க வருபவர்களிடம் எல்லாம் அன்பொழுக பேசியும், சிரித்தும் அவர்களை அனுப்பி வைக்கிறார். இன்று கூட அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் பிரம்மாண்ட கேக் வெட்டி நிர்வாகிகளுக்கு அதனை தனது கையாலேயே பகிர்ந்து கொடுத்தார்.

75வது பிறந்தநாள்
ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாள் என்பதால் இதனை பவள விழாவாக மிகப் பெரிய அளவில் அதிமுக கொண்டாடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணியில் முன்னாள் அமைச்சர்கள் ஈடுபட்டுள்ளதால் மிகவும் எளிமையாக கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இதனிடையே தீர்ப்பு தந்த உற்சாகத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஜெயலலிதாவின் 75வது பிறந்தநாளை பவள விழா மாநாடாகவோ, பொதுக்கூட்டமாகவோ நடத்த விரும்புகிறார்.

பலத்தை நிரூபிக்கலாம்
இதன் மூலம் தனது பலம் என்ன என்பதை டெல்லிக்கு நிரூபிக்கலாம் என்பதோடு அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை கரைபுரள வைக்கலாம் எனக் கணக்கு போடுகிறார். ஆனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்காக முன்னாள் அமைச்சர்கள் பலரும் ஏராளமாக செலவு செய்திருப்பதால் மீண்டும் மாநாடு, பொதுக்கூட்டம் என நடத்தினால் அதற்கு செலவு பிரச்சனை வரக்கூடுமோ என்பதையும் அவர் கவனத்தில் கொண்டிருக்கிறாராம்.

இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு
இதனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுக்கு பிறகு, ஜெயலலிதா பிறந்தநாள் பவளவிழா மாநாடு தொடர்பாக நிர்வாகிகளுடன் மேலும் விரிவான ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
-
"அம்மாவின் அன்பு! என்றும் அம்மாவின் நினைவில்!" அவிநாசி தனபால் திடீர் உருக்கம்! இபிஎஸ்ஸுக்கு மெசேஜா? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி!












Click it and Unblock the Notifications