Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அன்வர் ராஜா திமுகவிற்கு போன.. சில மணி நேரங்களில் எடப்பாடி செய்த காரியம்.. நிலைமை கைமீறுதே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் இருந்து வெளியேறி அன்வர் ராஜா திமுகவில் திடீரென இணைந்தது பெரிய அளவில் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நேற்று எடப்பாடி பழனிசாமி மாலை திருவாரூரில் செய்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது.

அதிமுகவின் மிக முக்கியமான இஸ்லாமிய முகம்களில் ஒருவராக அறியப்படும் அன்வர் ராஜா திமுகவில் இணைந்துள்ளார். அதிமுக அமைப்புச் செயலாளராக உள்ள முன்னாள் எம்பி அன்வர் ராஜாவின் இந்த முடிவு அதிமுகவை கடுமை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Anwar Raja dmk

அன்வர் ராஜா 2001ல் ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பாக தமிழக சட்டசபைக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட இவர் தமிழக அரசில் இதற்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். முன்னதாக 16ஆவது மக்களவைத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு 2014 தேர்தலில் இவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக பணியாற்றியவர் அன்வர் ராஜா.

அதிமுக மீது இஸ்லாமியர்கள் அப்செட்

2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அதிமுக-பாஜக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டது. அன்வர் ராஜா, அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்றும், சசிகலாவுக்கு ஆதரவு என்றும் சமீபத்தில் தெரிவித்தார். எடப்பாடியை விமர்சனம் செய்யும் விதமாக சசிகலாவிற்கு ஆதரவாக பேசினார். எடப்பாடி பழனிசாமி மீது விமர்சனம் வைத்ததையடுத்து, 2021-ஆம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். 2023ல் மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் இப்போது மீண்டும் அதிமுகவின் பாஜக கூட்டணியை எதிர்த்து திமுகவில் இணைந்துள்ளார்.

ஏற்கனவே பாஜக கூட்டணி காரணமாக அதிமுக மீது இஸ்லாமியர்கள் பலர் அப்செட்டில் இருக்கும் நிலையில்தான் திமுக பக்கம் ஐக்கியம் ஆகி உள்ளார் அன்வர் ராஜா. சமீபத்தில் கூட பாங்கு ஓதும் நேரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதற்காக மன்னிப்பு எல்லாம் கேட்டு இஸ்லாமியர்களை இம்ப்ரஸ் செய்ய நினைத்தார். சாரி தெரியாமல் பேசி விட்டேன் என்றெல்லாம் எடப்பாடி கூறினார். அப்படி இம்ப்ரஸ் செய்ய நினைத்த எடப்பாடி டிப்ரஸ் ஆகும் வகையில்.. அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றுள்ளார். இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது.

எடப்பாடி செய்த சம்பவம்

இப்படிப்பட்ட நிலையில் நேற்று அன்வர் ராஜா வெளியேறிய சில மணி நேரங்களில் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை திருவாரூரில் செய்த சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. கூட்டத்திற்கு இடையே நிர்வாகி ஒருவர் இஸ்லாமியர்கள் அணியும் குல்லா ஒன்றை வழங்கினார். இதை வாங்கி எடப்பாடி பழனிசாமி அணிந்துகொண்டார்.

மக்களுக்கு முன்பாக இதை அணிந்து கொண்டார். அன்வர் ராஜா திமுக பக்கம் சென்றுள்ளார். இதனால் இருக்கிற இஸ்லாமியர்கள் ஆதரவையும் எடப்பாடி இழக்கும் சூழல் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் இஸ்லாமியர்களை கவரும் விதமாக எடப்பாடி பழனிசாமி நேற்று குல்லா அணிந்துகொண்டார். அன்வர் ராஜா சென்ற காரணத்தால்.. அதிமுகவிற்கு இஸ்லாமியர்கள் வாக்குகள் பறிபோகும் சூழல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் தென் மண்டலத்தில் அதிமுக அதலபாதாளத்திற்கு சென்று விட்ட நிலையில் அன்வர் ராஜாவின் முடிவு அதிமுகவிற்கு மேலும் சரிவை ஏற்படுத்தும் சூழல் ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+