இந்த நேரத்திலேயும் அரசியல் செய்கிறார்.. மக்கள் ஏமாற மாட்டாங்க.. எடப்பாடியை விளாசிய ஸ்டாலின்
சென்னை: வெள்ள பாதிப்பு நேரத்திலும் அரசியல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமியின் நாடகத்தை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட விழாவில் பேசுகையில் விமர்சித்தார்.
சென்னை பெரம்பூரில் தனியார் பள்ளியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:- சென்னையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என்று கூறினேன். 2 வாரத்தில் வழங்கப்பட்டு இருக்கிறது. இப்போது வரும்போது நான் அதிகாரிகளிடம் கேட்கும் போது 98 சதவீத நிவாரண நிதி விநியோகிக்கப்பட்டது என்று கூறினார்கள்.

மீண்டும் சிலர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.. எங்களுக்கு வரவில்லை. கிடைக்கவில்லை என்று 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு விரந்து நிவாரணை தொகையை உறுதியாக வழங்குவோம். மத்திய அரசிடம் இருந்து நிதி வரலாம் என்று காத்திருக்கலாம். ஆனால் ஒன்றிய அரசு தரவில்லை என்று காரணம் சொல்லாமல் உடனடியாக கொடுத்தோம்.
புல்லரித்து போனேன்: இதற்கிடையே தான் தென் மாவட்டங்களிலும் மழை, வெள்ளம் வந்துவிட்டது. அவர்களுக்கு ரூ.6000 நிவாரணம் அறிவித்து இருக்கிறோம். விரைவில் கொடுப்போம். நேற்று தென்மாவட்டத்திற்கு நான் சென்றேன். அப்போது பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தேன். அவர்கள் அரசு விரைவாக செயல்பட்டு எங்களை காப்பாற்றினார்கள் என்றனர். மக்கள் மகிழ்ச்சியாக.. பல்வேறு சோதனைகளுக்கு மத்தியில், இன்னல்களுக்கு மத்தியில் என்னை பார்த்து மகிழ்ச்சியோடு வரவேற்றதை பார்த்து நான் புல்லரித்து போனேன்.
ஆனால் இன்னைக்கு அர்த்தம் இல்லாமல் சிலர் குறை கூறுகிறார்கள். அரசுக்கு உதவியாக.. எந்த கட்சியாக இருந்தாலும் அரசுக்கு துணை நிற்க வேண்டும். அரசு கூட இருந்து மக்கள் பணி ஆற்றியிருக்க வேண்டும். அப்படி யாரும் வந்தார்களா என்றால் இல்லை. கொரோனா காலத்தில் ஆட்சியில் இருந்தபோது கூட அவர்கள் செய்யவில்லை. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக தான் ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை ஆரம்பித்து மக்களுக்கு துணை நின்றது. இதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.
திடீரென ஏன் பாசம்: இந்த மாதிரி நேரத்திலேயும் மலிவான அரசியல் செய்ய முன்னாடி வந்துவிடுகிறார் எடப்பாடி பழனிசாமி. கொஞ்ச நாளுக்கு முன்பு சிறுபாண்மை மக்களுக்கு பாதுகாவலனாக இருப்பது அதிமுக தான் என்று பேசினார். சிறுபாண்மை மக்கள் மீது திடீரென ஏன் பாசம் பொங்குது. முத்தலாக், குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு அளித்தது ஏன் என்று தெரியும் பழனிசாமிக்கு.. அப்போது கூட்டணி தர்மம் என்று கூறினார்.
இப்போது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று கபட நாடகம் ஆடுகிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இவர் நாடகத்தை பார்த்து மக்கள் நிச்சயமாக ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணி தான் அடுத்து ஆண்டு நடைபெறும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதற்கு மக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
கமல்ஹாசனின் மநீம தேர்தலில் போட்டியிட வேண்டும்.. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் வைத்த திருமாவளவன்! -
நம்பர் 1 முதல்வர் யார்? டாப் 5 லிஸ்ட்டில் யார் யார்? 1952 ராஜாஜி முதல் 2021 ஸ்டாலின் வரை! -
ஸ்டாலின் வீட்டில் 3 மணி நேரம் காத்திருந்து! கண்ணீருடன் வெளியேறினார் துரைமுருகன்! வேல்முருகன் பகீர் -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை












Click it and Unblock the Notifications