எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தரப்பு எம்எல்ஏ அருள் திடீர் சந்திப்பு.. பின்னணியில் நடப்பது என்ன?
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் ராமதாஸ் தரப்பு பாமக எம்எல்ஏ அருள் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் அன்புமணியை தொடர்ந்து ராமதாஸ் தரப்பு பாமகவும் அதிமுக கூட்டணியில் இணைவதற்கான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், அதிமுக - பாஜக கூட்டணியில் அடுத்தடுத்து பல்வேறு கட்சிகளும் இணைந்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் பாமக அன்புமணி தரப்பில் இணைந்து தொகுதி பங்கீட்டையும் முடித்துவிட்டது. அன்புமணி தரப்பு பாமகவுடன் கூட்டணி உறுதியான பின்னர் தான், எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தார்.

இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை சமாதானம் செய்யும் நோக்கில் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் ராமதாஸ் தரப்புடன் திமுகவின் சில சீனியர் அமைச்சர்கள் பேசி வந்தனர். ஆனால் ராமதாஸ் தரப்பு பாமகவை திமுக தங்களின் கூட்டணிக்குள் கொண்டு வந்தால், விசிக அந்த கூட்டணியில் இருக்காது என்று திருமாவளவன் வெளிப்படையாகவே அறிவித்தார்.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் இணைக்க திமுக தலைமை ஆர்வம் காட்டவில்லை. தனியாக போட்டியிட வைத்து பாமக ஆதரவு வாக்குகளை பிரிக்க திமுக திட்டமிட்டது. இதனிடையே அன்புமணியும் ராமதாஸ் தரப்பு பாமகவை என்டிஏ கூட்டணியில் சேர்க்க கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால் அதிமுக தரப்பு ராமதாஸ் அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கவில்லை.
இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவுக்கு தனித்து நிற்பது அல்லது தவெகவுடன் செல்வது என்ற இரு வாய்ப்புகள் மட்டுமே இருந்தது. இந்த நிலையில் ராமதாஸ் தரப்பு பாமக ஆதரவு எம்எல்ஏ அருள் திடீரென அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு நடத்தி இருக்கிறார். இதனால் ராமதாஸ் தரப்பு பாமகவை கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி முயற்சிக்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சேலம், தர்மபுரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவிலான வன்னியர்கள் வசித்து வருகின்றனர். பாமகவை கூட்டணியில் இணைப்பதன் மூலமாக வன்னியர்களின் வாக்குகள் பெருவாரியாக அதிமுக பக்கம் திருப்ப முடியும். இதனால் ராமதாஸ் அணியையும் கூட்டணிக்குள் கொண்டு அதிமுக முயற்சிப்பதாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
பிரதமர் மோடியின் முரட்டு அடிமை.. எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின் -
ரூ.10க்கு சோறு, குழம்புடன் சுவையான மதிய உணவு.. 25 ரூபாய்க்கு அசைவ உணவு.. பாமக செம வாக்குறுதி! -
அதிமுகவை நம்பி சாத்தூரில் களமிறங்கும் நயினார் நாகேந்திரன்.. கைகொடுக்குமா முக்குலத்தோர் வாக்குகள்? -
பெண்களின் திருமண வயது 21 ஆகும்.. மகளிர் அனைவருக்கு மாதம் ரூ.2000! ஆஃபர்களை அள்ளி வீசிய அன்புமணி! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம்












Click it and Unblock the Notifications