Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிடிஆர் கூட்டத்தில் பங்கேற்காதது தப்புதான்.. இந்தா ஆரம்பிச்சுட்டாரு ஜெயக்குமார்

பிடிஆருக்கு அறிவுறுத்தி ஜெயக்குமார் ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்".. என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நிதியமைச்சர் கலந்து கொள்ளாதது குறித்து, மாஜி அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தி ட்வீட் பதிவிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில், கடந்த 17-ம்தேதி, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

 பிடிஆர்

பிடிஆர்

இதுகுறித்து செய்தியாளர்கள் பிடிஆரிடம் கேள்வி எழுப்பினர்.. அதற்கு அமைச்சர் பிடிஆர் சொல்லும்போது, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிக தாமதமாக தெரிவிக்கப்பட்டது. 17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், 10-ம் தேதிக்கு மேல்தான் தகவல் சொன்னார்கள். அந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வேண்டியது குறித்த விஷயங்களும் தாமதமாக தந்தார்கள்..

 நிகழ்ச்சிகள்

நிகழ்ச்சிகள்

அதற்குள் எனக்கு வேறு நிகழ்ச்சி வந்துவிட்டது.. ஒரு வளைகாப்பு போக இருக்கிறோம்... மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்யவும் முடியாது.. அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100% நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்பதை 10 நாட்களுக்கு முன்பு வந்து சொல்வார்கள் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்று கூறியிருந்தார்.

 அண்ணாமலை

அண்ணாமலை

பிடிஆர் தந்த இந்த விளக்கத்தை பாஜக தரப்பு ஏற்கவில்லை.. குறிப்பாக, மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் இதை பற்றி சொல்லும்போது, "பிடிஆர் சொன்ன அந்த காரணத்தை பார்த்து தமிழகமே அதிர்ச்சியில் தலைகுனிந்தது... வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டியிருப்பதால்தான் செல்லவில்லை என்று சொல்வாரா நம் தமிழ்நாட்டுக்கு நிதியமைச்சர்? இதிலிருந்து தங்கள் அரசு எதற்கு முக்கியத்துவம் தருகிறது என்று தெளிவாகிறது.

பாஜக

பாஜக

செப்டம்பர் 2ம் தேதியே லக்னோவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் அறிவிப்பு செய்தித் தாள்களில் வந்துவிட்ட நிலையில், போதிய அவகாசம் இல்லை என்கிறாரே.. பிறகு லக்னோவுக்கு நேரடி விமானம் இல்லை என்கிறாரே, பிறகு சிறிய ரக விமானங்களில் நான் செல்ல மாட்டேன் என்கிறாரே" என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஜெயக்குமார்

இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் இதுகுறித்து விமர்சித்துள்ளார்.. "தமிழக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுகிற ஜிஎஸ்டி கூட்டத்தில் பிடிஆர் பங்கேற்காதது வருத்தம்.. அதற்காக சொல்லப்படுகிற காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. பொதுமக்கள் - வணிகர்கள் - ஆகியோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் 30-க்கும் மேற்பட்ட ஜிஎஸ்டி கூட்டங்களில் நான் கலந்து கொண்டுள்ளேன்.

 தம்பி பிடிஆர்

தம்பி பிடிஆர்

ஒருமுறைகூட பங்கேற்காமல் இருந்தது இல்லை.. நிதியமைச்சராக தனது கடமையை செய்யாமல் இருப்பது தமிழக மக்களுக்கு துரோகம் அல்லவா? தம்பி.. பிடிஆர்.. கவனத்தில் கொள்".. என்று ஜெயக்குமார் கடிதம் வாயிலாக தன் கைப்பட எழுதி அதில் கையெழுத்தும் பதிவிட்டுள்ளார். இதை தன்னுடைய ட்வீட்டிலும் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+