ஆதார் + வருமான வரி + பான் கார்டு.. இன்று முதல் மாறப்போகும் முக்கிய விஷயங்கள்.. நோட் பண்ணுங்க
சென்னை: அக்டோபர் மாதம் தொடங்கி உள்ள நிலையில் இன்று முதல் வருமான வரி, ஆதார் அட்டை மற்றும் பரஸ்பர நிதிகள், F&O, TDS தொடர்பான விதிகள் மற்றும் சிலிண்டர் விலைகள் உள்ளிட்ட பலவற்றில் மாற்றங்களைக் கொண்டுவர உள்ளனர். இன்று முதல் மாறும் முக்கிய விதிகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஆதார் மாற்றம்: இத்தனை காலம் ஆதார் இல்லாதவர்கள் ஆதார் பதிவு செய்ததற்கான எண்ணை கொடுக்க அனுமதிக்கப்பட்டனர். இனி ஆதார் எண்ணுக்குப் பதிலாக ஆதார் பதிவு ஐடியைக் குறிப்பிட அனுமதிப்பதை நிறுத்தப்படும். அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதி அமலுக்கு வருகிறது. இந்த மாதம் முதல், தனிநபர்கள் பான் ஒதுக்கீடு ஆவணங்களில் தங்கள் ஆதார் பதிவு ஐடியை குறிப்பிட முடியாது. மாறாக ஆதார் கணக்கு எண்ணை மட்டுமே கொடுக்க முடியும்.

அதேபோல் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் போது ஆவணங்களில் தங்கள் ஆதார் பதிவு ஐடியை குறிப்பிட முடியாது. மாறாக ஆதார் கணக்கு எண்ணை மட்டுமே கொடுக்க முடியும்.
பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகள், சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்புத் திட்டங்கள் அக்டோபர் 1, 2024 முதல் செயல்படுத்தப்படும். புதிய விதிகள், நிதி அமைச்சகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன.
அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டில் சிறு சேமிப்பு திட்டங்களுக்கான தற்போதைய வட்டி விகிதங்களைத் தொடரும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. அதாவது இந்தக் காலக்கட்டத்தில் தற்போதுள்ள கட்டணங்கள் மாறாமல் இருக்கும். இந்த முடிவால் அஞ்சல் அலுவலக சேமிப்பு திட்டங்களில் பொது வருங்கால வைப்பு நிதி, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY), தேசிய சேமிப்பு சான்றிதழ் (NSC), தபால் அலுவலக நேர வைப்பு (POTD), மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ், மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS) போன்றவற்றின் வட்டி விகிதம் அக்டோபர் மாதமும் அதே போல் தொடரும்.
சிறார்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகளை முறைப்படுத்துதல், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐகளால் பிபிஎஃப் கணக்குகளை நீட்டித்தல் போன்ற நடவடிக்கைகள் இந்த மாதம் மேற்கொள்ளப்பட உள்ளன.
வருமான வரி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருமான வரி தொடர்பான சில மாற்றங்களை மத்திய பட்ஜெட் 2024 இல் அறிமுகப்படுத்தினார். அதில் சில மாற்றங்கள் அக்டோபர் 1 முதல் செயல்படுத்தப்படும். மூலத்தில் செய்யப்படும் வரி விலக்குகள் (டிடிஎஸ்) தொடர்பான குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வரும். குறிப்பிட்ட மத்திய மற்றும் மாநில அரசு பத்திரங்களுக்கு 10% TDS பொருந்தும். கூடுதலாக, ஆயுள் காப்பீட்டு பாலிசி, வீட்டு வாடகை செலுத்துதல் போன்றவற்றுக்கான டிடிஎஸ் செலுத்துதல் இன்று முதல் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சிலிண்டர் விலை: வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் உயர்ந்து உள்ளது. 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூ.48 உயர்ந்து உள்ளது. ரூ.1855க்கு விற்கப்பட்டு வந்த சிலிண்டர் விலை ரூ.1903 ஆக உயர்ந்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications