வேகமாக வீசும் காற்று.. கஜா புயலால் சென்னை, புதுவையில் கடல் சீற்றம்.. மக்கள் பீதி
கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை: கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மக்கள் பீதிக்கு உள்ளாகி உள்ளனர்.
இந்த புயலால் கடலோர மாவட்டங்கள்தான் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்குதான் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தமிழகத்தில் தயார் நிலையில் இருக்கிறார்கள். இதன் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

எண்ணூர்
இந்த நிலையில்தான் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். அதையும் மீறி செண்டை மீனவர்கள் சிலர் கடலோர காவல்படையினரால் மீட்கப்பட்டனர். இதற்கு மத்தியில் சென்னையில் உள்ள எண்ணூர் கடலை பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது.

சீற்றம் ஏற்பட்டது
இதை தொடர்ந்து கஜா புயலால் சென்னையில் சில இடங்களில் கடல் சீற்றம் ஏற்பட்டது. எண்ணூர் அருகே உள்ள சின்ன குப்பம், பெரிய குப்பம் கடல் பகுதியில் சீற்றம் ஏற்பட்டது. காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள மக்கள் பீதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புதுவையில் என்ன?
கஜா புயல் காரணமாக புதுச்சேரியில் கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரி கடற்கரை சாலை மூடபட்டது. ஆனால் அதை பொருட்படுத்தாமல் மக்கள் கடல் சீற்றத்தை பார்க்க வந்தனர். கடல் சீற்றத்தை பார்க்க வரும், பொதுமக்களை போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்பினார்கள்.

பாதுகாப்பு அதிகரிப்பு
இந்த புயலால் கடலூர், நாகை, பாம்பன் ஆகிய கடலோர மாவட்டங்கள்தான் இந்த புயல் காரணமாக பாதிப்பை சந்திக்க உள்ளது. தற்போது சென்னையிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதற்காக கடலோர காவல் படையும் தயார் நிலையில் இருக்கிறது. மீட்பு பணிகளை செய்ய வசதியாக கடலோர காவல்படை அந்தந்த மாவட்டங்களில் களமிறங்கி உள்ளது.












Click it and Unblock the Notifications