ஆறுதலாக வந்த அரசாணை.. ரூ.382 கோடி ஒதுக்கிய அரசு! வெள்ளம் பாதித்த வீடுகளை சீரமைக்க, புதிதாக கட்ட நிதி
சென்னை: சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைப்பதற்காக ரூ.382 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டு உள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியாக டிசம்பர் இறுதியில் தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாகவும் பேரழிவுகள் ஏற்பட்டன. குறிப்பாக இரு பாதிப்புகளில் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள் முழுமையாகவும் ஒரு பகுதியாகவும் சேதமடைந்தன.

ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசு நிவாரண உதவிகளை வழங்கிய நிலையில் தற்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை சீரமைக்கவும், புதிதாக கட்டவும் தமிழ்நாடு அரசு ரூ.382 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டு உள்ளது." என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications