Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛மாதம் ரூ.1000’’.. அரசு உதவி பெறும் பள்ளி மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.. சென்னை கலெக்டர் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடப்பு கல்வியாண்டான 2024-25 முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளும் தமிழக அரசின் ‛புதுமைப் பெண்' திட்டத்தின் கீழ் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகளின் உயர் கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களின் கல்விக்கு உதவியும் வகையிலும் ‛புதுமைப்பெண்' என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

chennai Pudhumai Penn Scheme

அதன்படி அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 கல்வி உறுதித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என்பதன் கீழ் புதுமைப்பெண் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் தமிழகத்தில் ஏழை, எளிய மாணவ-மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த திட்டத்தை அரசு பள்ளிகள் மட்டுமின்றி அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி ஏற்ற முதல்வர் ஸ்டாலின் வரும் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு முடித்திருந்தாலும் ‛புதுமைப்பெண்' திட்டத்தில் விண்ணப்பித்து மாதந்தோறும் ரூ.1000 பெறலாம் என்று அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் தான் சென்னையில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகள் ‛புதுமைப்பெண்' திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெற விண்ணப்பம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டள்ளதாவது:

பெண்‌ கல்வியை போற்றும்‌ விதமாகவும்‌, உயர்கல்வியை உறுதி செய்து இன்றைய பெண்‌ சமூகம்‌ நாளைய தமிழகத்தை தாங்கும்‌ அறிவியல்‌ வல்லுநர்களாகவும்‌, மருத்துவராகவும்‌, பொறியாளராகவும்‌, படைப்பாளராகவும்‌, நல்ல குடிமக்களை பேணும்‌ உயர்கல்வி கற்ற பெண்களாகவும்‌, கல்வி அறிவு தொழில்நுட்பம்‌ நிறைந்த உழைக்கும்‌ சமூகத்தை சார்ந்தவராகவும்‌ உருவாக அடித்தளமாக "புதுமைப்‌ பெண்" என்னும்‌ உன்னதமான திட்டம்‌ தமிழ்நாடு முதலமைச்சரால்‌ தொடங்கி வைக்கப்பட்டு, தமிழகம்‌ முழுவதும்‌ சிறப்பான முறையில்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமூக நலன்‌ மற்றும்‌ மகளிர்‌ உரிமைத்துறையின்‌ மூலமாக "புதுமைப்‌பெண்‌ திட்டத்தில்‌, அரசுப் பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை படித்து மேற்படிப்பில்‌ சேரும்‌ அனைத்து மாணவிகளுக்கும்‌ உயர் கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000 அவர்களின்‌ வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ சென்னை மாவட்டத்தில்‌ 11,015 மாணவிகள்‌ மாதம்‌ ரூ. 1000 பெற்று வருகின்றனர்‌. கடந்த ஆண்டு வரை அரசுப் பள்ளிகளில்‌ பயின்ற மாணவிகள்‌ மட்டுமே இந்த திட்டத்தால்‌ பயன் பெற்றனர்‌.

இதனைத்‌ தொடர்ந்து, 2024-25ஆம்‌ கல்வியாண்டு முதல்‌'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தின்‌ வாயிலாக அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளும்‌ பயன்பெறும்‌ வகையில்‌ இத்திட்டம்‌ தற்பொழுது விரிவுபடுத்தப்பட்டு, அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ 6ஆம்‌ வகுப்பு முதல்‌ 12ஆம்‌ வகுப்பு வரை தமிழ்‌ வழி கல்வியில்‌ படித்த மாணவிகளுக்கும்‌ உயர்கல்வி முடிக்கும்‌ வரை மாதம்‌ ரூ.1000 ‌வங்கிக்‌ கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும்‌ என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

எனவே. சென்னை மாவட்டத்தில்‌ உள்ள அரசு உதவிபெறும்‌ பள்ளிகளில்‌ பயின்று தேர்ச்சி பெற்று உயர்கல்வி பயிலும்‌ மாணவியர்‌ 'புதுமைப்‌ பெண்‌" திட்டத்தில்‌ பயன்பெற அந்தந்தக்‌ கல்லூரியின்‌ சிறப்பு அலுவலர்‌ (நோடல் ஆஃபிஸர்) வாயிலாக விண்ணப்பித்து பயனடைய வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+