பண்டிகையை கொண்டாடுங்க மக்களே! தீபாவளிக்கு 4 நாள் தொடர் விடுமுறை? அரசுக்கு பறந்த கோரிக்கை.. நடக்குமா?
சென்னை: இந்தாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அரசு இதுகுறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீப ஒளி திருநாள் என்று அழைக்கப்படும் தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இனிப்புகள் தயாரித்து புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்து கொண்டாடாமல் தீபாவளி நிறைவடையாது.

சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை பட்டாசு இல்லாமல் தீபாவளியை கொண்டாடவும் முடியாது. இந்த ஒரு நாள் விழாவுக்காக விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒரு வருடம் முழுவதும் உழைக்கின்றனர்.
கம்பி மத்தாப்பு தொடங்கி வானில் வர்ணஜாலம் காட்டும் வான வேடிக்கைகள் வரை பகல் இரவு நேரங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடுவது தான் தற்போது தீபாவளி ட்ரெண்டாக மாறிவிட்டது. பொதுவாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவு திடலில் பட்டாசு விற்பனை நடைபெறும். இது மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் ஏராளமானோர் பட்டாசு கடைகளை அமைக்கின்றனர். இதுமட்டுமல்லாமல் புத்தாடை, வீட்டு உபயோக பொருட்கள் என வியாபாரம் களைகட்டும்.
இது ஒரு புறம் இருக்க தீபாவளி பண்டிகை தற்போது மாதக் கடைசியில் வருகிறது. இதனால் செலவுகளுக்கு என்ன செய்வது என்பது குறித்து குடும்ப தலைவர்கள் கலங்கி வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு 30, 31ம் தேதிகளில் ஊதியம் அளிக்கப்படும். மேலும் தனியார் நிறுவன ஊழியர்களுக்கு ஒன்று முதல் ஐந்தாம் தேதி ஏன் பத்தாம் தேதி கூட ஊதியம் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் தீபாவளிக்கு முன்னதாகவே ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
இது மட்டுமில்லாமல் அக்டோபர் 2024 விடுமுறை அதிகம் இருந்த மாதமாக இருந்தது. காந்தி ஜெயந்தி, காலாண்டு தேர்வு, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை என அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் இருந்தது. மேலும் கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது தீபாவளி பண்டிகை விடுமுறை மட்டுமே இருக்கும் நிலையில் 31ஆம் தேதியான வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது அதற்கு அடுத்து சனி ஞாயிறு வருகிறது இடையில் வெள்ளிக்கிழமை மட்டுமே வேலை நாளாக இருக்கிறது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதனால் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், அரசு ஊழியர்களுக்கும் பணிச்சுமை குறையும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து 31,1, 2, 3 அதாவது வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்திருக்கிறது. இது தொடர்பாக தமிழக அரசுக்கு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர் .இந்த நிலையில் அரசு ஊழியர்கள் கோரிக்கையை ஏற்று வெள்ளிக் கிழமையை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்காக ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications