ஆசிரியர்கள் டியூசன் எடுக்க தடை! பள்ளிகளில் பாலியல் புகாருக்கு தொலைப்பேசி எண்! ஐகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பள்ளி கல்வி தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியான உத்தரவு- வீடியோ

    சென்னை: பள்ளி, கல்லூரிகளில் பாலியல் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த வேண்டும் என்றும், அரசு பள்ளி ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்க தடை விதிக்கப்படுவதாகவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி கல்வி தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு அதிரடியான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

    Govt school teachers dont conduct tuition: madras high court order

    பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பாலிய புகார் தெரிவிக்க இலவச தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமனறம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இதேபோல் பாலியல் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்களை அடுத்த 8 வாரத்தில் ஏற்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. புகார் தெரிவித்த 24 மணி நேரத்தில், அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுதவிர அரசு ஊதியம் பெறும் ஆசிரியர்கள் தனியாக டியூசன் எடுக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், அரசு ஊதியம் பெற்றுக்கொண்டு தனியாக டியூசன் எடுக்கும் ஆசிரியர்களின் செயல் சட்டவிரோதம். எனவே அப்படி டியூசன் எடுக்கும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். டியூன் எடுக்கும் ஆசிரியர்களை கண்டுபிடிப்பதற்காக தனியார் தொலைப்பேசி எண்கள் ஏற்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+