பெருகிய வெள்ளம்...உருகிய வெல்லம்...காத்திரு பகையே.. கொந்தளிக்கும் எச். ராஜா!
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் ஹெச்.ராஜா ஆளும் திமுக அரசை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மழையால் பெருகிய வெள்ளம்...உருகிய வெல்லம்... அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும், தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... 'காத்திரு பகையே' என்று பாஜகவின் எச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பெரும்பாலும் அமைதியான முறையில் உள்ளாட்சித் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்றது. இன்றைய தினம் சில வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

நகர்புற உள்ளாட்சித் தேர்தல்
இந்த உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க தலைமையில காங்கிரஸ், ம.தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை எதிர்கொண்டன. மறுபுறம், அ.தி.மு.க தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க, பா.ம.க, தே.மு.தி.க, நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து களம் கண்டன. சட்டமன்றத் தேர்தல்

பாஜக தனித்து போட்டி
நாடாளுமன்றத் தேர்தலை கூட்டணியாக எதிர்கொண்ட அ.தி.மு.க, பா.ஜ.க கூட்டணி இந்த உள்ளாட்சித் தேர்தலில் பிளவு பெற்றது. பாஜகவும் அதிமுகவும் தனித்தனியாக களமிறங்கின. திமுகவை பாஜக அதிகம் விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தது.

எச்.ராஜா பேஸ்புக் பதிவு
உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் நாளைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்த நிலையில் பாஜகவின் எச். ராஜா, திமு.கவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். அதில், 'பெருகிய வெள்ளமும்' 'உருகிய வெல்லமும்', 'கருகிய கால் கொலுசும்', "பல்லிக்குப் பாடை கட்டிய புளியும்", "குறுமிளகு என்று சொல்லிக் கொடுத்த பப்பாளி விதைகளும் என்று திமுக அரசு கொடுத்த பொங்கல் பரிசுத் தொகுப்பை கிண்டலடித்துள்ளார்.

காத்திரு பகையே
தொடர்ந்து அவர் தனது பேஸ்புக் பதிவில், "மிளகாய் பொடியென்று மக்கள் தலையில் அரைத்துக் கொடுத்த கோலப் பொடியும்', "அணில் கடித்ததால் ஏற்பட்ட மின்சார வெட்டும்', "தில்லு முல்லு கழகத்தின் கதைமுடிக்கக் கங்கணம் கட்டிக் காத்திருக்கின்றன... 'காத்திரு பகையே' என்று காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications