சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள போலீஸ் ஐ.ஜி. கண்ணீர் விட்டது ஏன்? எச்.ராஜா சொல்வதை பாருங்க
Recommended Video

சென்னை: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு போராட்டப் பெண்மணி, ரெஹனா ஃபாத்திமாவை பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல முற்பட்ட அம்மாநில போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித், ஐயப்பன் கோயிலில் கண்ணீர் மல்க வழிபட்ட போட்டோக்கள் வைரலாகியுள்ளன.
[ஏன் கண்ணீர் விட்டு ஐயப்பன் கோவிலில் சாமி கும்பிட்டார் கேரளா ஐஜி.. பரபரப்பு! ]
இதுபோல அவர் ஏன் சாமி கும்பிட்டார் என்பதற்கு பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா ஒரு விளக்கத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: இவர் திரு.பினராயி விஜயனின் விருப்பத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்ததால் இவரை வைத்து 18 ஆண்களுடன் நிர்வாணமாக நடித்த ரெஹனா ஃபாத்திமா வை காவல்துறையினர் வேடத்தில் சபரிமலைக்கு அழைத்துச் செல்ல நிர்பந்திக்கப் பட்டார். இந்து விரோத முதல்வரின் பழிவாங்கும் செயல்.
இவ்வாறு ட்வீட் செய்துள்ளார். மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் ஸ்ரீஜித்துக்கு விருப்பம் இல்லாதபோது கூட ரெஹனா ஃபாத்திமாவை, சபரிமலை அழைத்துச் செல்ல முதல்வர் வற்புறுத்தினார் என்ற குற்றச்சாட்டை ராஜா முன் வைத்துள்ளார்.
இவர் திரு.பினராயி விஜயனின் விருப்பத்திற்கு எதிராக மாவோயிஸ்டுகள் மீது நடவடிக்கை எடுத்ததால் இவரை வைத்து 18 ஆண்களுடன் நிர்வாணமாக நடித்த ரெஹனா ஃபாத்திமா வை காவல்துறையினர் வேடத்தில் சபரிமலைக்கு அழைத்துச் செல்ல நிர்பந்திக்கப் பட்டார் இந்து விரோத முதல்வரின் பழிவாங்கும் செயல். pic.twitter.com/S7pZgXdGXy
— H Raja (@HRajaBJP) October 23, 2018
இதன் மூலம், மாவோயிஸ்டுகளுக்கு பினராயி விஜயன் ஆதரவாக இருப்பதை போலவும், இந்துக்களுக்கு எதிரானவர் என்பதை போலவும், அதிகாரிகளை துன்புறுத்துபவர் என்பதை போலவும் பல கோணங்களில் தாக்குதல் தொடுத்துள்ளார் எச்.ராஜா.












Click it and Unblock the Notifications