அரசியல் பூகம்பத்தின் துவக்கம்.. எச்.ராஜா சொல்வதை பாருங்க
Recommended Video

சென்னை: ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தியதை பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கிண்டல் செய்துள்ளார்.
ட்விட்டரில் இதுகுறித்து ராஜா கூறுகையில், "சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு. திமுகவால் ஆந்திராவில் TDP க்கு பல சதவிகிதம் ஓட்டு அதிகரிக்கும். அதேபோல் தமிழகத்தில் TDP யால் திமுக விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அதிகம். அரசியல் பூகம்பத்தின் துவக்கம்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்வீட்டை வெளியிட்டது ராஜாவா, அவர் அட்மினா என்பது தெரியவில்லை. இருப்பினும், அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இந்த ட்வீட் வெளியாகியுள்ளதால் ராஜாதான் வெளியிட்டிருப்பார் என நம்ப முகாந்திரம் உள்ளது.
சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் சந்திப்பு. திமுக வால் ஆந்திராவில் TDP க்கு பல சதவிகிதம் ஓட்டு அதிகரிக்கும். அதேபோல் தமிழகத்தில் TDP யால் திமுக விற்கு மிகப்பெரிய அளவில் ஆதரவு அதிகம். அரசியல் பூகம்பத்தின் துவக்கம். pic.twitter.com/RQNT6Bhhxd
— H Raja (@HRajaBJP) November 10, 2018
இந்திய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார். தனது முயற்சியில் பெரும் பகுதியை வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications