Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பார்ரா.. முதல் ஆளாக பொன் மாணிக்கவேலை பாராட்டியது யார் தெரியுமா?

பொன். மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு எச்.ராஜா வரவேற்பு தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அடடே பொன்.மாணிக்கவேல் மீது எச்.ராஜாவுக்கு இவ்வளவு பாசமா?

ஐஜி பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கை எல்லோராலும் விரும்பப்பட்ட ஒன்றுதான். இவர் பணியிலிருந்து ஓய்வு பெற்று விடக்கூடாதே என்று ஏங்க வைத்துவிட்டவர் பொன்.மாணிக்கவேல்!

ஆனால் இவர் மீது எச்.ராஜாவுக்கு அப்படியென்ன பிணைப்போ தெரியவில்லை. எப்பவுமே இவர் என்றால் ராஜாவுக்கு அன்புதான். கடந்த ஆகஸ்ட் மாதம் கூட பொன். மாணிக்கவேலின் மகள் திருமணம் சென்னையில் நடைபெற்றது.

கல்யாணம்

அந்த நேரம் அவமதிப்பு வழக்கு தொடர்பாக எச்.ராஜாவை போலீசார் "வலைவீசி" தேடி கொண்டிருந்த சமயத்தில், பளபள உடையுடன் கல்யாண மண்டபத்துக்கே வந்தார் எச்.ராஜா.

சிரித்து கொண்டே போஸ்

சிரித்து கொண்டே போஸ்

மண்டபத்தில் வீடியோ ஒரு பக்கம் எடுத்து கொண்டிருக்க, போட்டோ ஒரு பக்கம் எடுத்து கொண்டிருக்க, பொன்.மாணிக்கவேலுடன் சிரித்து கொண்டே போஸ் கொடுத்து, அதனை தன் ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டார் ராஜா.

முதல் ஆள்

முதல் ஆள்

அத்துடன் பொன்.மாணிக்கவேலுக்கு பதவிக்காலம் முடிவடைய போகிறது என்றதும் அவரது பதவியை நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேட்டி கொடுத்தது எச்.ராஜாதான். தற்போதுகூட பதவி நீட்டிப்பு அறிவிப்பு வந்தவுடன் முதல் ஆளாக வந்து இப்போது பாராட்டை தெரிவித்துள்ளவரும் எச்.ராஜாவே!!

வரவேற்கிறேன்

இது சம்பந்தமாக தனது ட்விட்டர் பக்கத்தில் "இன்று ஓய்வு பெறும் நிலையில் இருந்த ஐ ஜி பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு சிலை கடத்தல் பிரிவு சிறப்பு புலனாய்வு அதிகாரியாக ஓராண்டு பதவி நீட்டிப்பு சென்னை உயர்நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ளது. மிக்க மகிழ்ச்சி அளிக்கின்ற விஷயம். வரவேற்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+